Tuesday, March 13, 2012

இதைத் தான் விதியென்பதா?

அதிர்ஷ்டம் அழைத்தது

அதன் பின்னாலே

துரதிர்ஷ்டமும் துரத்துகிறதே

எதனாலே ?

இதைத் தான் விதியென்பதா ? - நான்

இழந்து விட்ட மதியென்பதா  ?



தோலறுந்த  காலணியை நான் எடுத்துத் தைக்கும் முன்னே

நூலறுந்த கதையை என்னவென்பேன் ?



அரச மரத்தை சுற்றி

அடி வயிற்றைத் தொட்டு பார்த்தவளுக்கு

அதிர்ச்சி !  அவள் கணவன் போன இடம் எங்கே ?



விதவையின் கனவில் மணக்கோலம் -

விழித்தவுடன்  கணவனைக் காணவில்லை?

No comments:

Post a Comment