Monday, March 12, 2012

மது மயக்கம்...

உதட்டின் வழி ஊர்ந்து செல்லும் உல்லாசம்

உள்ளே சென்றவுடன் மயக்குமதன் சல்லாபம்

பிதற்றுவதும் அதனுள்ளே ஆடி அடங்குவதும்

பின்னலெனத் தொடரச்சொல்லும்  மது மயக்கம்...





கள்ளருந்திய வாயமுதமெனக் காட்டும் மயக்கமதில்

உள்ளருந்திய விருந்தெனவே உணர்வுகளும் எழுந்து

உள்ளரும்பிய ஊக்கமது கூட்டும் உலகமதில் விழுந்து

கள்ளரும்பிய பூக்களாய் மனமும் மாறிவிடும்...





உணர்வாய் மாறுவது மாதுவின் மயக்கமென்றால் - அந்த

உணர்வை மீறுவது ம்துவின் இயக்கமன்றோ!


நினைவைக் கொடுக்க மாதுவும் தயங்கி நின்றால் - அந்த

நினைவைக் கொடுப்பதும் ம்துவின் இயக்கமன்றோ! 





கவலைக்கு மருந்தாக உட்கொள்ளக்

கண்கண்ட விருந்தாகும் மது மயக்கம்...


அவளுக்கு இணையாக தொட்டுக்கொண்டால்

அவதியைக் கொடுப்பதும் மது மயக்கம்...


மறந்த நினைவுகளையும் அகழ்வாய்ந்து

திறந்து காட்டுவதும் மது மயக்கம்...


பிறந்த பிறவிக்கும் புகழ்சேர்க்கச் 

சிறந்து விளங்குவதும் மது மயக்கம்...

No comments:

Post a Comment