வீடு வாசல் விட்டு திரை கடல் ஓடி திரவியம்
தேடுவதற்காக எத்தனையோ மனிதர்கள் காய்ந்த
மரங்களைப் போலவே காலத்தை கடத்துகின்றனர்
ஈரமில்லாமல் உணர்வுகளை உலரவிட்டு கொண்டு . . .
உலரப்போகும் ஒவ்வொரு வார்த்தைகளுக்காக
உதடுகளை ஈரப்படுத்தும் எத்தனையோ மனிதர்கள் . . .
கணவனை நினைத்து மனைவியின் துடிப்பு :
கண்மை உலர்வதைக் கண்டு சொல்லும் என்கணவா
பெண்மை உலர்வதை அறியலையோ ?
உண்மை உறங்குவதை நீ அறிவாய் - ஆனால் என்
உணர்வுகள் உறங்காததை அறிவாயோ ?
உடமைக்காகவேச் சென்று இருக்கிறாய் - நானும் அந்த
கடமைக்காகவே காத்து இருக்கிறேன் . . .
பெண்மையின் துடிப்பு இப்படி :
நான் அணிந்து இருப்பது அணிகலன்களா?
இல்லை அணிகாலன்களா?
புருவத்தின் மத்தியில் அணிகின்ற பொட்டு - நீ எந்த
துருவத்தில் இருந்தாலும் உனை நினைப்பதற்குத் தானோ ?
தொங்கி கொண்டிருக்கும் காதணியும் கூட தலையசைவில்
ஏங்கிக் கொண்டிருக்கும் என் காதலை ஞாபகப்படுத்துகிறதன்றோ ?
சத்தமிடும் வளையலும் கூட இரவு நேரங்களில் என்னோடு
யுத்தமிடத் தொடங்குகின்றன நான் கொண்ட மையலோடு . . .
உன் உதடுகள் பேசும் விவேகத்தின் முன்னால்
என் கொலுசுகளின் அசைவுகள் கூட மௌனமாகின்றன . . .
சில நேரங்களில் வீரத்தோடு பேசுகின்ற வார்த்தைகள் கூட
விவேகத்தின் முன்னால் தோற்று விடுகின்றன . . .
கூடலின் போது அழிந்த பொட்டின் நெளிந்த அழகு
தேடலின் போது கிடைப்பதில்லையே - நீ எந்த
விழியில் எடுத்துச் சென்றாய் என்கணவா - நான் அந்த
வழியை நினைத்துக் கொண்டு இருப்பது தான் என் கனவா ?
என் உடலின் பசலை நிறம் மாறுவதற்காகவே
நான் தினமும் மஞ்சள் குளிக்கின்றேன் . . .
குளித்தபின் தோன்றும் வெப்பத்தின் உணர்வை நீ
உதிர்க்கும் வார்த்தையிலே உணர்ந்து கொள்ளவா என்கணவா ?
- இல்லை -
களித்தபின் தோன்றும் வெப்பத்தின் நிலையை நான்
குளிக்கும் போது நினைப்பது தான் என் கனவா ?
கண்ணாடி கூட கேலி செய்கின்றன என் உருவத்தை - உன்
முன்னாடி நான் கொண்ட உவகை எங்கே என்று . . .
தேடுவதற்காக எத்தனையோ மனிதர்கள் காய்ந்த
மரங்களைப் போலவே காலத்தை கடத்துகின்றனர்
ஈரமில்லாமல் உணர்வுகளை உலரவிட்டு கொண்டு . . .
உலரப்போகும் ஒவ்வொரு வார்த்தைகளுக்காக
உதடுகளை ஈரப்படுத்தும் எத்தனையோ மனிதர்கள் . . .
கணவனை நினைத்து மனைவியின் துடிப்பு :
கண்மை உலர்வதைக் கண்டு சொல்லும் என்கணவா
பெண்மை உலர்வதை அறியலையோ ?
உண்மை உறங்குவதை நீ அறிவாய் - ஆனால் என்
உணர்வுகள் உறங்காததை அறிவாயோ ?
உடமைக்காகவேச் சென்று இருக்கிறாய் - நானும் அந்த
கடமைக்காகவே காத்து இருக்கிறேன் . . .
பெண்மையின் துடிப்பு இப்படி :
நான் அணிந்து இருப்பது அணிகலன்களா?
இல்லை அணிகாலன்களா?
புருவத்தின் மத்தியில் அணிகின்ற பொட்டு - நீ எந்த
துருவத்தில் இருந்தாலும் உனை நினைப்பதற்குத் தானோ ?
தொங்கி கொண்டிருக்கும் காதணியும் கூட தலையசைவில்
ஏங்கிக் கொண்டிருக்கும் என் காதலை ஞாபகப்படுத்துகிறதன்றோ ?
சத்தமிடும் வளையலும் கூட இரவு நேரங்களில் என்னோடு
யுத்தமிடத் தொடங்குகின்றன நான் கொண்ட மையலோடு . . .
உன் உதடுகள் பேசும் விவேகத்தின் முன்னால்
என் கொலுசுகளின் அசைவுகள் கூட மௌனமாகின்றன . . .
சில நேரங்களில் வீரத்தோடு பேசுகின்ற வார்த்தைகள் கூட
விவேகத்தின் முன்னால் தோற்று விடுகின்றன . . .
கூடலின் போது அழிந்த பொட்டின் நெளிந்த அழகு
தேடலின் போது கிடைப்பதில்லையே - நீ எந்த
விழியில் எடுத்துச் சென்றாய் என்கணவா - நான் அந்த
வழியை நினைத்துக் கொண்டு இருப்பது தான் என் கனவா ?
என் உடலின் பசலை நிறம் மாறுவதற்காகவே
நான் தினமும் மஞ்சள் குளிக்கின்றேன் . . .
குளித்தபின் தோன்றும் வெப்பத்தின் உணர்வை நீ
உதிர்க்கும் வார்த்தையிலே உணர்ந்து கொள்ளவா என்கணவா ?
- இல்லை -
களித்தபின் தோன்றும் வெப்பத்தின் நிலையை நான்
குளிக்கும் போது நினைப்பது தான் என் கனவா ?
கண்ணாடி கூட கேலி செய்கின்றன என் உருவத்தை - உன்
முன்னாடி நான் கொண்ட உவகை எங்கே என்று . . .
No comments:
Post a Comment