Tuesday, March 6, 2012

கடை திறப்பு...

உறக்கம் மூடியக் கடை விழி திறக்கும் அவளது

கிரக்கம் மூடியத் தடை வழி திறந்து நானும்

பொறுக்க முடியா என்னாசை வழியும் திறந்து

வெறுக்க முடியா தன்னாசை தான் கடை திறப்பு... 


கிரக்கம் - மயக்கம் அல்லது களைப்பு .



ஊசல் ஆடும் என் உள்ளமது அவளைக்  காணும் 

வாசல் வந்து காத்திருக்கும் பொழுதோடு மனதும் 

பூசல் ஆடும் உணர்வோடு  புவனமே தோணும்

ஏசல் கொண்டு பூத்திருக்கும் கடை திறப்பு...

ஏசல் - ஏசுதல் அல்லது திட்டுதல், புவனம் - உலகம்.  



அணைக்கட்டில் மீதேறி வரும் வெள்ளமின்னும் 

அணைமீறத் துடிக்கும் அந்த வேகத்தோடு உன்

துணைக்கட்டில் தானேறும் வரை உள்ளமின்னும்

துணிந்திருக்கும் துஞ்சாத மோகத்தோடு...
 
துஞ்சாத  - உறங்காத. 

 

சாயும் பொழுதில் குவிந்த குமுதவாய் அவிழ்ந்து 

தோயும் போது  சுரக்கும் அமுதவாய் நிறைந்து

காயும் நிலவும் பூரணமாய் ஒளிர்ந்து மறைந்து

தேயும் வரையில் ஆடி இடையும் குறையும்...
 
 
தோய்தல் - புணர்தல் அல்லது ஒன்றிக்களித்தல் அல்லது கலத்தல், அவிழ்ந்து - மலர்ந்து.   



சிலையில் கண்ட அழகை எல்லாம் சிற்பித் தன்

தலையில் ஏற்றிச் செதுக்கிய உருவம் போலே மென்

கலையில் வளரப் பழகிய பருவம் கொண்டு பொன் 

உலையில் வார்த்தது தான் உன் தேகமோ?



இல்லையன்னாமல் இருக்குமுன் இடையில் நானும்

தொல்லை செய்தாலொழிய உறங்காத விழிகளும்

எல்லைக் காணும் வரைத் தாங்காத வழிகளும் உன்

சொல்லைக் காணாதவரைத் ஏங்கித் தவிக்குமே....
 


உடைவிலக்கி  ஊர்ந்து செல்லும் உணர்வுகளின்

தடைவிலக்கித் தேர்ந்து கண்ட கொங்கையும்தன்

நடைவிலக்கிக் கற்று கொள்ளும் பங்கயத்தாளும்   

இடைவிலக்கி ஆடும் நடனத்தால் ஏற்றமுண்டோ? 

பங்கயத்தாள் - தாமரைப் போன்ற பாதம், கொங்கை - மார்பகம். 



அல்லும் பகலும் குறையாத உன்னழகில் உறவாடக்     

கொல்லும் பொழுதும் நிறையாமல் விளையாடுவதைச்

சொல்லும் உன் தேகமும் மறையாமல் கலந்தாடினால்

செல்லும் என் சந்தேகம் மொத்தமும்...


 
அல்லும் - இரவும்.

No comments:

Post a Comment