எங்கேயப்பா இறைவன் ?
யாசகம் என்பதே பிச்சைக்காரியின்
வாசகம் - அந்த வாசகம் தான்
இறைவனுக்கு யாசகமோ ?
இல்லையென்றால் ஏன் இந்த படைப்பு ?
நாம்
ஆண்டவனை நினைத்து அழுததைவிட
அவள் அதிகமாக அழுதிருப்பாள் -
இருந்தும் ஆண்டவன் அவளருகினில்
மருந்தளவில் கூட வராதது ஏன் ?
எங்கேயப்பா இறைவன் ?
அழுக்கு ஒரு காரணம் என்றால்
உலகமே ஒரு அழுக்கு உருண்டை தானப்பா ?
எங்கேயப்பா இறைவன் ?
இழுக்கு ஒரு காரணம் என்றால்
இறைவன் ஏனப்பா ?
எங்கேயப்பா இறைவன் ?
முன் வினைப் பலனா ? இல்லை
தன் வினைப் பயனா ?
எங்கேயப்பா இறைவன் ?
சிலர் பிச்சைக்காக அழுகிறார்கள்
பலர் இச்சைக்காக அழுகிறார்கள்
அழுகுரல் மட்டுமே வேறுபாடு . . .
எங்கேயப்பா இறைவன் ?
பாவம் செய்வது மனிதன் மட்டும் தானா ?
எங்கேயப்பா இறைவன் ?
உருவம் இல்லாதவனுக்குத் தான் எத்தனை
உருவமப்பா ? அத்தனை உருவமும் அடங்கி இருப்பது எந்த
துருவமப்பா ?
எங்கேயப்பா இறைவன் ?
கண்ணுக்கு அருகில் புருவம் இருந்த போதும்
கண் புருவத்தை பார்த்ததுண்டா ?
இறைவனும் புருவத்தைப் போலவா ?
இருந்தால் மற்றவர் பார்த்து இருக்க கூடுமே ?
எங்கேயப்பா இறைவன் ?
ஆத்திகத்தில் இருந்த போது அகப்படவில்லையே
ஆண்டவனும் கூட . . .
நாத்திகத்தில் இருந்து நகன்ற போது
நல்லதும் நலிந்ததும் தெரிந்ததடா . . .
எங்கேயப்பா இறைவன் ?
கேள்விகளால் நிறைந்த மஞ்சமே இவ்வுலகம் . . .
இதில் எல்லா கேள்விகளுக்கும் பதில்
கேள்வியின் பக்கத்திலே இல்லையப்பா . . .
எங்கேயப்பா இறைவன் ?
நீ எந்த கேள்வியைத் தொடுகிறாய் என்பதே
இன்றைய கேள்வி ?
எங்கேயப்பா இறைவன் ?
கேள்விக்கும் பதிலுக்கும் தூரமப்பா
கேள்விகள் இறைவனுக்குப் பாரமப்பா . . .
எங்கேயப்பா இறைவன் ?
இறைவன் இருப்பது ?
உணவுக்கு பின்னாலா ?
உணர்வுக்கு முன்னாலா ?
கனவுக்கு பின்னாலா ?
கற்பனைக்கு முன்னாலா ?
வினாவுக்கு பின்னாலா ?
வினவுவதற்கு முன்னாலா ?
உலகத்தின் பின்னாலா ?
கலகத்தின் முன்னாலா ?
அசைவுகளுக்கு பின்னாலா ?
ஆசைகளுக்கு முன்னாலா ?
எங்கேயப்பா இறைவன் ?
இறைவன் இருப்பது உண்மையென்றால்
அன்னையைப் படைத்தது எதனாலே ?
அவளுக்கும்
ஆசையைக் கொடுத்தது எதனாலே ?
எங்கேயப்பா இறைவன் ?
தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம் . . .
எங்கேயப்பா இறைவன் ?
புரிந்தவர்களின் பதில் தேவை இல்லையப்பா . . .
கேள்வியாய் இருப்பவனே இறைவன் . . .
இறகுகள் உதிர்வது பறவையின் வளர்ச்சிக்காகவே...
ReplyDeleteதமிழனை வாழ்த்தும் ஓர் தமிழன்....
ReplyDelete