Wednesday, March 14, 2012

உள்ளவரை தான்...

என்னவளே!
 
உன்னில் மட்டுமல்ல
 
மலருக்கும் கூட
 
ஈரம் உள்ளவரை தான் நாற்றம் இருக்கும் . . .
 
 
 
உன் இளமைக்கும் மட்டுமல்ல
 
பாதைக்கும் கூட
 
தூரம் உள்ளவரை தான் ஏற்றம் இருக்கும் . . .
 
 
 
உன் எழிலுக்கும் மட்டுமல்ல
 
பூமிக்கும் கூட
 
பாரம் உள்ளவரை தான் போற்றுதல் இருக்கும் . . .
 
 
 
உன் உணர்வுக்கு மட்டுமல்ல
 
உணவுக்கும் கூட
 
காரம் உள்ளவரை தான் பற்றுதல் இருக்கும் . . .
 
 
 
உன் விளையாடலுக்கு மட்டுமல்ல
 
இமைத் தேடலுக்கும் கூட
 
நேரம் உள்ளவரை தான் நாட்டம் இருக்கும் . . .
 
 
 
ஆனால்
 
இவையாவும் இழந்தபின்னே
 
 
 
என் விதியாடலுக்கு மட்டுமல்ல
 
 
மனமாடலுக்கும்  கூட
 
தாரம் உள்ளவரை தான் ஆட்டம் இருக்கும் . . .

No comments:

Post a Comment