என்னவளே!
உன்னில் மட்டுமல்ல
மலருக்கும் கூட
ஈரம் உள்ளவரை தான் நாற்றம் இருக்கும் . . .
உன் இளமைக்கும் மட்டுமல்ல
பாதைக்கும் கூட
தூரம் உள்ளவரை தான் ஏற்றம் இருக்கும் . . .
உன் எழிலுக்கும் மட்டுமல்ல
பூமிக்கும் கூட
பாரம் உள்ளவரை தான் போற்றுதல் இருக்கும் . . .
உன் உணர்வுக்கு மட்டுமல்ல
உணவுக்கும் கூட
காரம் உள்ளவரை தான் பற்றுதல் இருக்கும் . . .
உன் விளையாடலுக்கு மட்டுமல்ல
இமைத் தேடலுக்கும் கூட
நேரம் உள்ளவரை தான் நாட்டம் இருக்கும் . . .
ஆனால்
இவையாவும் இழந்தபின்னே
என் விதியாடலுக்கு மட்டுமல்ல
மனமாடலுக்கும் கூட
தாரம் உள்ளவரை தான் ஆட்டம் இருக்கும் . . .
No comments:
Post a Comment