ஈனப் பிறவியல்லவா நம் அரசியல் பெருந்தலைகள்...
போர்க்குற்றம் செய்தவனும் இன்று உலக அரங்கிலே
யார்க்குற்றம் செய்ததெனக் கேட்கின்றான் உலகமதில்
நியாயம் என்று முன்மொழிகின்ற சில நாடுகளும்
காயம் பட்டு உயிரிழந்த இனத்தைக் கண்டதுண்டோ?
கொற்றவனாய் இருந்தவன் கூற்றுவனாய் மாறி கொடுங்
கூற்றுக்கு இரையாக நம்மினத்தை அழித்ததும் ஏனோ?
கருவாயில் இருந்து பிறந்தவன் எவனும் போரிலே
கருவறுக்க மாட்டான் முறைகேடாய் அவனும்
எருவாயில் இருந்து பிறந்ததினாலே ஈழப்பெண்களின்
கருவறுத்தான் அதற்கு அரசியலின் பின்னணியும்
பெருவாயில் விழுங்கிய பிணங்கள் அத்தனையும்
ஒருநாளில் உலகையும் உலுக்காதோ? பாவியவன்
ஒருவாயில் ஊர்கூடி உமிழும் நிலையும் வரும்
தருவாயில் தனியீழம் இலங்கையில் பிறக்காதோ?
ஒத்தைக்கு ஒத்தையாய் நம்மினத்தை எதிர்த்திருந்தால்
உருக்குலைந்து போயிருப்பான் சிங்களனவன் தந்திரத்தால்
பத்து நாடுகளின் துணை கொண்டு அழித்ததாலே நம்மக்கள்
பரிதவித்து துடித்து உயிர்விட்டு மடிந்ததன்றோ பரிதாபம்...
சிந்தித்தால் விடை கிடைக்கும் நம்மினத்தைச்
சந்தித்தால் வழிபிறக்கும் வாழ்வும் நிலைக்கும்...
உப்பு சப்பில்லாத தீர்மானம் நிறைவேறியது தானதில்
தப்பு செய்தவனைப் பற்றிய வார்த்தைகளே இல்லை...
கதைக்கப் படுகிறது நம்மினத்தை பலவாறு என்றாலும்
புதைக்கப் பட்டது ஈழத்தமிழ் மக்களின் ஊனுடல் அன்றோ!
கொடியும் வேரேனவே வாழ்ந்திருந்த நம்மினத்தின்
கொடியைப் கொளுத்தி வேரைப் பிடுங்கியெறிந்த
முடியரசான சிங்களத்தின் முகத்திரைக் கிழித்து
முடியைப் பிடுங்கி எறிந்திடுவோம் உலகறிய...
விதைப்போம் நாமும் நம் எண்ணமும் எழுத்தினையும்
விரும்பிய தேசத்தில் நம்மினத்துக்கு நல்வாழ்வு ஓர்நாள்
கிடைக்கும் அதில் நாமும் முடிந்தவரை பங்காற்றியிங்கு
கிளர்ந்தெழும் மாணவர் சமூகத்துக்கு தோள் கொடுப்போம்...