Wednesday, March 14, 2012

நிழல் காண் மண்டிலம்...

பாவையின் கைப் பையிலும்   

தேவையானதொரு பொருளாக

சேவை செய்வதற்கும் தன்னழகு

அவை ஏறுவதற்கும்  அருளாசி 

வழங்கியது கண்ணாடி தான்.


அன்று அவள் தன்

கலைந்த முடியைத் திருத்தவும்

அலைந்த அழகை நிறுத்தவும்

கலந்த களிப்பைப் பொருத்தவும்

கனவின் நிலையை உறுத்தவும்

கண்ணாடியே பயன்பட்டது.

ஒப்பனைக்காக மட்டுமல்ல தன்

ஒத்திகைக்காகவும் சில நேரம் 

கற்பனைக்காக காட்டிக்கொள்ளும் 

காரியம் மறைக்கும் காரணமாகவும் 

கண்ணாடியே பலன்தந்தது.  

  

இன்று அதே இடத்தை

அலைபேசி பெற்றுக் கொண்டிருக்கிறது.

அலைபேசியிடத்தில் அவள் தன் 

தலைபேசும்  அழகை படம்பிடித்து

தன் நிலை திருத்தவும் சுற்றச்

சூழ்நிலை பொருத்தவும் கற்றுத்

தன் நிலை உயர்த்தவும் உற்றத்

தோழியாகி உவகை கொள்ளச் 

செய்கின்றாள்...





ஆண்டாள் தன் அழகைக்

காலக் கண்ணாடியில் பார்த்து

காலனை வெற்றி கொள்ளத் தான்

மாலவனைப் பற்றிக் கொண்டு தன்

மாயங்கள் புரிந்தாளோ? அந்தச்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் - அவன்

அடிதொட்டதாலே இடர்ப்பிடியாள்... 



ஆண்டாள் தமிழை மட்டுமா ஆண்டாள் 

அரங்கனையும் சேர்த்தல்லவா ஆண்டாள்

அவனைத்தவிர வேற்றாளை வேண்டாள்

அதீத நினைவாலே காதலும் கொண்டாள்

அரங்கத்தில் மாலைசூடக் கனவு கண்டாள்

உள்ளத்தாலே உணர்வுகளைத் தாண்டாள்

உணர்வுகளாலே பூமாலைப் பூண்டாள்

சீர்கொண்டு யாரையும் தீண்டாள்

நேர்கொண்டு  நிறைகொள்ள சீண்டாள்  

மால்கண்டு மறைகாக்க மாண்டாள்...

அருள் வேண்டி...

ஒரு புறம் பார்த்தே என்னவளுடைய
 
இரு விழிகளின் சாலையைக் கடந்ததாலே
 
மறுபக்கம் நானும் பார்க்க மறந்து போனது . . . 
 
 
 
அந்நிலவின்
 
ஒருபக்கம் ஒளி இருந்தாலும் - மறைந்து இருக்கும்
 
மறுபக்கம் இருள் தானே - அவளும் மறைத்து இருக்கும்
 
மறுபக்கம் அருள்வாளா ? 
 
 
 
இல்லையென்றால்
 
திரண்டு இருக்கும் என்னுடைய ஒருபக்க எண்ணங்களில்
 
புரண்டு இருக்கும் அவளின் மறுபக்க நினைவுகளைக் 
 
கண்டு மிரள்வேனோ ?
 
 
 
தொல்லையென்றால்  
 
விரிந்து இருக்கும் அவளது அழகின் எல்லையில் சுடர்விடத்
 
திரிந்து இருக்கும் இடைவெளியில் நெய்விட்டு நெடுநேரம்
 
எரிந்து சுருள்வேனா ?
 
 
 
பிடியில்லா வானத்தைப் போல நானும் தேடித்
 
பிடிக்கின்ற நிலவாக வருவாளோ ?
 
 
 
கொடியில்லா மலரைப் போல அவளும் படரத்  
 
துடிக்கின்ற  மடிமேலே வருவாளோ ?
 
 
 
உரையில்லா என் உள்ளக் குறிப்பிற்கு முன்
 
உரையாகும் உணர்வுகளாக வருவாளோ ?
 
 
 
கரையில்லா இன்பக்கடல் நீந்த என் இளமைக்
 
கரையேறும் தோணியாக வருவாளோ ?

உள்ளவரை தான்...

என்னவளே!
 
உன்னில் மட்டுமல்ல
 
மலருக்கும் கூட
 
ஈரம் உள்ளவரை தான் நாற்றம் இருக்கும் . . .
 
 
 
உன் இளமைக்கும் மட்டுமல்ல
 
பாதைக்கும் கூட
 
தூரம் உள்ளவரை தான் ஏற்றம் இருக்கும் . . .
 
 
 
உன் எழிலுக்கும் மட்டுமல்ல
 
பூமிக்கும் கூட
 
பாரம் உள்ளவரை தான் போற்றுதல் இருக்கும் . . .
 
 
 
உன் உணர்வுக்கு மட்டுமல்ல
 
உணவுக்கும் கூட
 
காரம் உள்ளவரை தான் பற்றுதல் இருக்கும் . . .
 
 
 
உன் விளையாடலுக்கு மட்டுமல்ல
 
இமைத் தேடலுக்கும் கூட
 
நேரம் உள்ளவரை தான் நாட்டம் இருக்கும் . . .
 
 
 
ஆனால்
 
இவையாவும் இழந்தபின்னே
 
 
 
என் விதியாடலுக்கு மட்டுமல்ல
 
 
மனமாடலுக்கும்  கூட
 
தாரம் உள்ளவரை தான் ஆட்டம் இருக்கும் . . .

ஏதோ சிந்தனை...

கண்ணாடி தனது பிம்பத்தை தவிர
 
மற்ற பிம்பங்களையே  காட்டும் . . .
 
அது தனது பிம்பத்தைக் காட்டுவதற்கு
 
இன்னொரு கண்ணாடி தேவைப்படுகிறது . . .
 
 
ஆனால் பெண் எப்போதும் தன்னை
 
காட்டுவதிலேயே அதிகம் கவனம்
 
எடுத்துக் கொள்கிறார்கள் . . .
 
 
பெண்
 
கண்ணாடியின் எதிர் வினையோ ?
 
கவனமாக கையாள வேண்டியது
 
கண்ணாடி மட்டுமல்ல
 
பெண்ணும் தான் . . .
 
கல்லைக் கூட மெதுவாக வைக்கலாம்
 
கண்ணாடியின் மீது - ஆனால்
 
வேகம் விவேகத்திற்கு அழகல்ல,
 
விளக்கம் விபரீதத்திற்கு அழகல்ல . . .
 
 
 
இரு புறமும் தெரிகின்ற
 
கண்ணாடியை இருந்த நான்
 
காதலெனும் ரசம் பூசிக் கொண்டதால்
 
என்னை நானே பார்த்து கொள்கிறேன் . . .
 
அதில் இத்தனை நாளில் இல்லாததொரு
 
இனிமையைக் காண்கிறேன் . . .
 
 
இளமைத் தடம் மாறுவதும்
 
இனிமை தடுமாறுவதும்
 
இங்கு தானோ ?
 
 
நடந்து வந்த பாதச் சுவடுகளை
 
நான் இரவிலே தேடிக் கொண்டிருக்கிறேன் 
 
தொலைத்த சோம்பலைச்
 
சுறுசுறுப்புடன் தேடும் எறும்புகளை போல. . .

நான் எழுதிய வர்ணனைகள்...

 வளர வளர கண்டு களிப்பதற்கும்
 
 போற்றுவதற்கும் அழகாய் இருப்பது
 
 தனங்கள் மட்டுமே - அவைத்  
 
 தளர தளர முற்றியதையும்
 
 வற்றியதையும் பார்த்து வருந்துவது
 
 மனங்கள் மட்டுமே!
 
  (தனங்கள் - செல்வங்கள் மற்றும் பெண்ணின் மார்பகங்களைக் குறிக்கும்)
 
 
 
 விழாச் சுமைதனை
 
விருப்பம்கொள்ள சுமக்கும்
 
 பருவப் பூவின்  
 
 மூடா மடலை
 
 மூடுவது யாரடியோ?
 
(பூ என்பது உலகம் மற்றும் பூவையும் குறிக்கும்)
 
 
 
 பூப்பெய்திய விரிசலும்
 
மூப்பெய்தினாலும் நெருங்குமோ?

 
 
 நாலு கால் பந்தலிட்டு
 
 நடுவிலே யாகக் குண்டமிட்டு
 
 நூலிடைப் போகத் தாளமிட்டு
 
 நோக்கத்தோடு கட்டுகின்றான்...
 
(திருமணம் மற்றும் அதன் பின்னர் நிகழும் உறவையும் குறிக்கும்)
 
 
 
 
 வெடிக்காத பருத்தியிலே
 
 ஆடை நெய்ய முடியுமா?
 
 
 
 பக்குவமாய் வளர்ந்த தேனடையும்
 
 பயனடைய ஓர்நாள் தானுடையும்...
 
 
 
 போகக் குடை இருந்தும் மேகம்
 
 பொங்கியெழுந்து தூவியது மழை...
 
 ஆகத் தடை இருந்தும் தேகம்
 
 ஏறி விழுந்து மேவியதன் பிழை...
 
 
 
 ருதுவான பூமியின் தலைமேலே அதி
 
 ரூபங்கள் நனைந்திட குடங்குடமாய்
 
 பொதுவாகச் சல்லடம் மேல் கொட்டுவதைப்
 
 போல் கொட்டுகின்றது மழை...
 
 அந்தரங்கள் வரை நீரானது மாய
 
 சுந்தரங்கள் காட்டியதோடு பூமியுடன் 
 
 போராடியே பூசிய வண்ணங்கள் கரைந்திட 
 
 காரோடிய பருவத்தின் மழை...  
 
(மழைப் பருவத்தையும் மங்கை திரண்ட நாளின் பருவத்தையும் குறிக்கும்)
 
 
 
 மண்ணிலே துளி விழுந்தால்
 
மறுபடியும் மழைமேகம் ஏற்குமோ?
 
 
 
 நீந்தத் தெரியாதவர்கள்
 
 குடம் பற்றி நீந்தியே
 
 சுழிதனில் சிக்காமல்
 
 கொள்ளிடக் கரை காண்பாரா?
 
 
 
 கொண்டை முடியத் தெரியாதவள்  
 
 குதித்து ஆடியத் தாண்டவத்தில்
 
 தண்டை ஓடியத்  தன் கால்கள்
 
 தவறி விடியுமுன் விழுந்தாளாம்...
 
 
 
 உடை வாழும் உணர்வுகளின்
 
 இடை வாழும் கலையுமதன்
 
 நடை வாழும் நாட்டியத்தின்
 
 விடை வாழும் நடுச்சங்கமோ?
 
 
 
 வியர்வைக்கு முன்னால் சிறு விளக்கு தேவையா?
 
 வியர்வைக்கு பின்னால் அதன் விளக்கம் தேவையா?
 
 
 
 பெர்முடா முக்கோணத்தில்  விழுந்தவர் யாரேனும்  
 
 பெருமை கொள்ள பிழைத்தது உண்டா?
 
 
 
 மர்ம தேசத்தில் கடன் கழித்தாலும் தன் பிறவிக்
 
 கர்மம் தொலைத்திட வழியுமுண்டோ?
 
 
 
 மத்தெடுத்து கடைந்தால்
 
 மசியாதக் கீரையுமுண்டோ?
 
 
 
 உடைந்த மதுக்குடத்திலே   
 
 ஒழுகாத மதுவுண்டோ?   
 
 
 ஆறாப் புண்ணை
 
 ஆற்றிவிடும் களிம்புண்டோ? 
 
 
 
 உடன்பட்ட விருந்துக்கு
 
கடன்படவும் மருந்துண்டோ?
 
 
 
 அழையாத நிகழ்வுக்குப்
 
 பிழையானால் பொறுப்பாகுமோ?
 
 
 
 நனையாத மீனுக்கு
 
 நடுக்கம் உண்டோ?
 
 
 
 மெய் எழுதிய உருவம்
 
 மை எழுதிய புருவம்
 
 பொய் எழுதிய தர்மமென
 
 போனதொரு கர்மம்...

Tuesday, March 13, 2012

விலை நிலங்கள்..​.

வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி வீடுகட்டியும்

கயிற்றின் மேலே நடப்பதைப் போலே மக்கள்

சோற்றுக்குப் பஞ்சமும் கையேந்தும் நிலையும் 

நேற்றுக்கும் இன்று விலைவாசிக்கும் பசிக்குப்

படியளக்க ஒருநாளில் கதியிழந்த மாக்களாய்

குடியிழக்க விதியளக்கும் எதிர்காலம் வரலாம்...




தனவான்கள் கூட ஒரு நாளில் சோறுகண்ட

கனவான்களாய் மாறும் நிலையும் சேறுகண்ட

உழவர்கள் மட்டுமே பின்னாளில்  வீறுகொண்ட

உழவும் கிட்டும் தனவானாகும் நிலையும் வரும்...




தாயாகிய தங்களது நிலந்தனை நிந்தனைக்குடன்பட்டு    

சேயாகிய மகள் புகுந்தவீடு செல்லும் நினைவினிலும்  

அள்ளி வழங்கிய பாசத்திற்கு விலையாக கண்ணீரைத்

தள்ளியும் தன் கடனைக் கழிக்கின்றனர் விவசாயிகள்...




எழுதும் கோல் உள்ளவன்  கூட எதிர்காலத்தில்

உழுதுண்டு பின் செல்ல நேரிடும் உணவுண்டு

பழுதின்றி வாழ வழியொன்று தானென்று

தொழுதுண்டு உழவை அவனும் மதித்திடுவான்...



களவுக்கும் வழியுண்டு பிற்கால நிலையில்

நிலவுக்கும் வழிகண்டு தற்கால நிலையை

விழலுக்கு இறைத்த நீராய் எதிர்காலமும்

உழவுக்குப் பின்வந்து நிற்குமன்றோ?



விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி இந்நாளில்

அவசியமான உழவுத் தொழிலின் நலம்கெடவே

அனைவருக்கும் பசிதீர்க்கும் அட்சயப் பாத்திரமும்

அனைவரும் யாசிக்கும் பிச்சைப் பாத்திரமாகுமோ?

இதைத் தான் விதியென்பதா?

அதிர்ஷ்டம் அழைத்தது

அதன் பின்னாலே

துரதிர்ஷ்டமும் துரத்துகிறதே

எதனாலே ?

இதைத் தான் விதியென்பதா ? - நான்

இழந்து விட்ட மதியென்பதா  ?



தோலறுந்த  காலணியை நான் எடுத்துத் தைக்கும் முன்னே

நூலறுந்த கதையை என்னவென்பேன் ?



அரச மரத்தை சுற்றி

அடி வயிற்றைத் தொட்டு பார்த்தவளுக்கு

அதிர்ச்சி !  அவள் கணவன் போன இடம் எங்கே ?



விதவையின் கனவில் மணக்கோலம் -

விழித்தவுடன்  கணவனைக் காணவில்லை?

காலப் பிழையில் அவள் நிலை...

ஆயிரம் துளிகளைத் தடுக்கின்றது -

அவள் ஏந்துகின்ற குடை -

ஆயினும்  ஒற்றைத் துளியாவது

அவள் மார்தொட நினைக்கின்றது -

அதனால் தான் அடைமழையோ ?



அடைமழை பெய்யும் போது

அவள் என்ன செய்வாள் ? -

குடை கூட என்ன செய்யும்

குற்றத்திற்கு உடன்படுவதைத் தவிர . . .




மார்தொட்ட ஒரு துளி கால் தொட நினைத்து

மயங்கி விழுந்து இடையில் காணாமல் போனதெங்கே ?




மார்பினில் விழுந்த நெகிழ்ச்சியில் அவள்

மானம் நனைத்து விட்டு உடையில் கைதியானதோ ?

மார் தழுவிய மகிழ்ச்சியில் இடையின் அலங்காரத்

தேர் அசையும் சிறு நடையில் காலாவதியானதோ ?



மண்ணில் விழுகின்ற மழைத்  

துளியும் எழுவது எதனாலே ?

பெண்ணைத் தழுவப் பெருமிதக்

களிப்போடு எழுவது பிழைக்காக . . . 
 

ஆம் பெண் அழகை பேரழகாய்

மிகைப்படுத்துவது  நீரென்றால் - அதனை

வகைப்படுத்துவது காற்றாகும் . . .

மணமேடை...

நான் நாயகனாக நிற்காத மேடை

ரசிகனாய், வாசகனாய் நின்ற மேடை

பலர்கூடி ஆசியுடன் விளங்கிய மேடை

இருவர்கூடி வாழ நேசம் வழங்கிய மேடை



கனவும் நினைவாக உலகம் கொடுத்த மேடை

களவும் கற்று மறக்க கற்றுக் கொடுத்த மேடை

மனமகிழ ஆசையின் ஆரம் தொடுத்த மேடை 

மஞ்சத்தில் கொஞ்ச நெஞ்சம் தொடுத்த மேடை



பாவாடைப் பருவத்திற்கும் பூவாடை கொடுத்த மேடை

தாவணியின் உருவத்திற்கும் சேலைத் தொடுத்த மேடை

சேலையின் தலைப்பிற்கும் ஆவலைக் கொடுத்த மேடை

சேர்ந்து வரும் கலைகளுக்கும் அவளைத் தொடுத்த மேடை...




மேதைகள் முட்டாளாவதும்

முட்டாள்கள் மேதையாவதும்

இந்த மேடையில் தான்...


பேதைகள் ஞானியாவதும்

பாதைதேடி  தேனீயாவதும்  

இந்த மேடையில் தான்...



சேவைகள் தேவையாவதும்

தேவைகள் சேவையாவதும் 

இந்த மேடையில் தான்...



ஆய்வும் ஓய்வு தேடுவதும்

ஓய்வில் ஆய்வு தேடுவதும்

இந்த மேடையால் தான்...



சேலைகள் சோலையாவதும்  

மாலைகள் வேலையாவதும்

இந்த மேடையில் தான்...



கனவுகள் நினைவாவதும்

நினைவுகள் கனவாவதும்  

இந்த மேடையால் தான்...



ஒருமை பெருமையாவதும்

பெருமை ஒருமையாவதும்

இந்த மேடையால் தான்...



மனசாட்சி காட்சியாவதும்

மணக்காட்சி சாட்சியாவதும்

இந்த மேடையில் தான்...



விதியும் மதியளப்பதும்    

மதியும் விதியளப்பதும் 

இந்த மேடையில் தான்...



மணமகள் படியளப்பதும்

மணமகன் மடியளப்பதும் 

இந்த மேடையால் தான்...



ஆடை அலங்காரமாய் கட்டி வந்த மேடை

ஆசை இலங்காரமாய் ஒட்டி வந்த வாடை

கூடைப் பூக்கோலமாய் கொட்டி அளக்கும் பாவை

கூடும்  மாக்கோலமாய் மெட்டி விளக்கும் சேவை...



இலங்காரமாய் - இலங்கு + ஆரமாய் (விளங்கும் ஆரமாய்)  

Monday, March 12, 2012

மது மயக்கம்...

உதட்டின் வழி ஊர்ந்து செல்லும் உல்லாசம்

உள்ளே சென்றவுடன் மயக்குமதன் சல்லாபம்

பிதற்றுவதும் அதனுள்ளே ஆடி அடங்குவதும்

பின்னலெனத் தொடரச்சொல்லும்  மது மயக்கம்...





கள்ளருந்திய வாயமுதமெனக் காட்டும் மயக்கமதில்

உள்ளருந்திய விருந்தெனவே உணர்வுகளும் எழுந்து

உள்ளரும்பிய ஊக்கமது கூட்டும் உலகமதில் விழுந்து

கள்ளரும்பிய பூக்களாய் மனமும் மாறிவிடும்...





உணர்வாய் மாறுவது மாதுவின் மயக்கமென்றால் - அந்த

உணர்வை மீறுவது ம்துவின் இயக்கமன்றோ!


நினைவைக் கொடுக்க மாதுவும் தயங்கி நின்றால் - அந்த

நினைவைக் கொடுப்பதும் ம்துவின் இயக்கமன்றோ! 





கவலைக்கு மருந்தாக உட்கொள்ளக்

கண்கண்ட விருந்தாகும் மது மயக்கம்...


அவளுக்கு இணையாக தொட்டுக்கொண்டால்

அவதியைக் கொடுப்பதும் மது மயக்கம்...


மறந்த நினைவுகளையும் அகழ்வாய்ந்து

திறந்து காட்டுவதும் மது மயக்கம்...


பிறந்த பிறவிக்கும் புகழ்சேர்க்கச் 

சிறந்து விளங்குவதும் மது மயக்கம்...

பெண்ணுரை...

Kd;DiuahdJ ngz;zpd; gpwg;G
KfTiuahdJ kz;zpd; rpwg;G
kjpg;GiuahdJ nghd;dpwNktpa cly;
gjpg;GiuahdJ Gd;difapd; vopy;
mzpe;JiuahdJ tpopAk; nkhopAk;
Ma;TiuahdJ Jbg;Gk; ebg;Gk;
ghpe;JiuahdJ FzKk; kdKk;
tphpTiuahdJ FoYk; ,ikAk;
GfOiuahdJ ,ilAk; eilAk;
rpwg;GiuahdJ ehzKk; khdKk;
mwpTiuahdJ kaf;fKk; jaf;fKk;
nghUSiuahdJ epjk;gKk; jdKk;
fUj;JiuahdJ ngz;ikAk jha;ikAk;;
epiwTiuahdJ Kj;jKk; nkhj;jKk;

Saturday, March 10, 2012

புலம்பும் சிலம்பம்...

என்னவளே

உன்னிடத்தில்

எந்த இடத்தில குறை உள்ளது

என்று நான் எப்படி கூறுவேன் ?


நான் "அந்த" மடத்தை

நாடி உறங்கும் போது . . .

"ஆ" னாக்க "அந்த" மடம்

ஆகாட்டி சந்த மடம்

இன்பம் என்று வந்த மடம்!

இழந்த பின்னே எந்த மடம்?

ஈரம் காய்ந்த "அந்த" இடம்

ஈடாகுமோ என் "சொந்த" மடம் . . .


வீடாள மறந்து நானும் கன்னியின்

காடாளச் சென்றதாலே எந்தன் 

பெண்டாளை விட்டு விட்டு "அந்த"

சண்டாளைச் சரண் அடைந்தேன் . . .


அடைந்தது போகமெனும்  பாற்கடலிலே  


கடைந்தது அமுதமென எடுத்துப் பருகியபின்

உடைந்தது கலசம் மட்டுமல்ல என்னுடைய

"மடை" திறந்த "கவனமும்" தான் . . .


நடனம் என்று நம்பி வந்து நாளும் "அந்த"

கடன்பட்டு நளினத்திலே நானும் "அங்கே"

உடன்பட்டு ஊடகத்திலே தான் மிதந்து மதி

இடமாறிய நாடகத்தை ஏன் மறந்தேனோ ?



நான் மறந்ததை கவிபெருமகனாம்,

இளங்கோ எடுத்துரைத்தான் - எல்லோருக்கும்

விளங்க தொடுத்துரைத்தான் - அது தானே

சிலப்பதிகாரம் எனும் காப்பியமாகி அதிலே

கலப்பதிகாரம் கூடாதென கண்டு சொல்ல

கண்ணகியை நாயகியாக்கி என்னுடைய

கண்ணெதிரே மாதவியைத் தூது விட்டான் . . .



மாதவியும் தூது வந்தாள்

மாதவனின் சூது கண்டாள்

மாவிலையின் தோரணத்தில்

பூவிலையின் காரணத்தால்

மேவியவள் மையல் கொண்டாள்

மேதினியைத் தான் மறந்தாள் . . .


கண்ணகியும் கண்டு கொண்டாள் -  இந்தப்

பெண்ணிடத்தில் என்ன இல்லையென

தன்னிடத்தைத் துறந்து தலைவனும்
 
சென்றதன் காரியத்தை உணரவைத்து

கணிகைமடி சொர்க்கமென கிடந்தவனை

வணிகம் செய்ய அனுப்பி வைத்தாள் . . .


வணிகம் செய்யச் சென்றவனை

வஞ்சித்தவன் பாண்டியன் என்ற

வினயம் கண்டு விளக்கம் கூற 

விதுரனிடம் சிலம்புடன் சென்று

நீதி கேட்டுப் போராடி கோபத்தணல் 

நீறு பூத்த நெருப்பாக தன் இடது

நெஞ்சம்தனில் தோன்றிடவே

வஞ்சியவள் வென்று வந்தாள்

மதுரையைக் கண்ணகியாய் . . .


 
(பூவிலை - விலைமகள் பெறும்  அற்றைப் பரிசம், வினயம் - சூழ்ச்சி, விதுரன் - கள்வன்)

எங்கேயப்பா இறைவன் ?

எங்கேயப்பா இறைவன் ?
 
 
யாசகம் என்பதே பிச்சைக்காரியின்
 
வாசகம் - அந்த வாசகம் தான்
 
இறைவனுக்கு யாசகமோ ?
 
இல்லையென்றால் ஏன் இந்த படைப்பு ?
 
 
 
நாம்
 
ஆண்டவனை நினைத்து அழுததைவிட
 
அவள் அதிகமாக அழுதிருப்பாள் - 
 
இருந்தும் ஆண்டவன் அவளருகினில்
 
மருந்தளவில் கூட வராதது ஏன் ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
அழுக்கு ஒரு காரணம் என்றால்
 
உலகமே ஒரு அழுக்கு உருண்டை தானப்பா ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
இழுக்கு ஒரு காரணம் என்றால்
 
இறைவன் ஏனப்பா  ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
முன் வினைப் பலனா ? இல்லை
 
தன் வினைப் பயனா ?
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
சிலர் பிச்சைக்காக அழுகிறார்கள்
 
பலர் இச்சைக்காக அழுகிறார்கள்
 
அழுகுரல் மட்டுமே வேறுபாடு . . .
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
பாவம் செய்வது மனிதன் மட்டும் தானா ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
உருவம் இல்லாதவனுக்குத் தான் எத்தனை
 
உருவமப்பா ? அத்தனை உருவமும் அடங்கி இருப்பது எந்த
 
துருவமப்பா ? 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
கண்ணுக்கு அருகில் புருவம் இருந்த போதும்
 
கண் புருவத்தை பார்த்ததுண்டா ?
 
இறைவனும் புருவத்தைப் போலவா ?
 
இருந்தால் மற்றவர் பார்த்து இருக்க கூடுமே ?
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
ஆத்திகத்தில் இருந்த போது அகப்படவில்லையே
 
ஆண்டவனும் கூட . . .
 
நாத்திகத்தில் இருந்து நகன்ற போது
 
நல்லதும் நலிந்ததும் தெரிந்ததடா . . .
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
கேள்விகளால் நிறைந்த மஞ்சமே இவ்வுலகம் . . .
 
இதில் எல்லா கேள்விகளுக்கும் பதில்
 
கேள்வியின் பக்கத்திலே இல்லையப்பா . . .
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
நீ எந்த கேள்வியைத் தொடுகிறாய் என்பதே
 
இன்றைய கேள்வி ?
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
கேள்விக்கும் பதிலுக்கும் தூரமப்பா
 
கேள்விகள் இறைவனுக்குப் பாரமப்பா . . .
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
இறைவன் இருப்பது ?
 
உணவுக்கு பின்னாலா ?
 
உணர்வுக்கு முன்னாலா ?
 
 
 
கனவுக்கு பின்னாலா ?
 
கற்பனைக்கு முன்னாலா ?
 
 
 
வினாவுக்கு பின்னாலா ?
 
வினவுவதற்கு முன்னாலா ?
 
 
 
உலகத்தின் பின்னாலா ?
 
கலகத்தின் முன்னாலா ?
 
 
 
அசைவுகளுக்கு பின்னாலா ?
 
ஆசைகளுக்கு முன்னாலா ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
இறைவன் இருப்பது உண்மையென்றால்
 
அன்னையைப் படைத்தது எதனாலே ?
 
அவளுக்கும்
 
ஆசையைக் கொடுத்தது எதனாலே ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம் . . .
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
புரிந்தவர்களின் பதில் தேவை இல்லையப்பா . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கேள்வியாய்  இருப்பவனே இறைவன் . . .

தீபாவளியில் அவனும் அவளும்...

அவன்:
 
ஆடியும் போனதடி
 
ஆசையும் கூடுதடி...
 
  
 
ஆடிக் காற்றினிலே
 
அங்கமெல்லாம் நொந்ததடி...
 
 
 
ஐக்கியம் ஆகிவிட 
 
ஐப்பசியும் வந்ததடி... 
 
 
 
அடைமழை போல நானும்  
 
அணைத்திட வருவேனே!
 
 
 
அவள்:
 
ஆடி வந்து என்னை   
 
ஆட்டி விட்டு போனதையா...  
 
 
 
கூடிய ஆசையெல்லாம்
 
குதியாட்டம் போடுதையா?
 
 
 
ஐப்பசியில் நீயும் வந்து
 
என்பசியில் நிறைவாயோ?   
 
 
 
மோட்சமதைக் காண  
 
முத்தமழை பொழிவாயோ?
 
 
 
அவன்:
 
மழைமேகம் முன்வந்து
 
மகிழும்படி கூறுதடி...
 
 
 
பூத்த பூவிலெல்லாம் உன்  
 
புன்னகையே தோன்றுதடி... 
 
 
 
சேர்ந்த ஆசைவந்து உன் 
 
சேலைதொட நினைக்குதடி...
 
 
 
மீண்டும் வீணையை மீட்டிடவே
 
மாலைவந்து அழைக்குதடி...
 
 
 
அவள்:
 
அழையாத  மேகமாய் நீயும்
 
அங்கத்தினிலே நுழைவாயோ?
 
 
 
பாரமாகும் ஆடைமேலே
 
பாரதப்போர் புரிவாயோ?
 
 
 
தூரமாகும் உணர்வுகளை
 
தூண்டிவிட வருவாயோ?
 
 
 
மத்தளம் போல் நான் மயங்கி
 
மெலிந்துவிட வருவாயோ?
 
 
 
அவன்:
 
அங்கத்திலே ஆசைவந்து
 
அலைக்கழித்துக் கொல்லுதடி...
 
 
 
சங்கத்தமிழ் கூட பாடிச்  
 
சங்கமிக்கச் சொல்லுதடி...
 
 
 
செங்கனிச் சாறெடுக்க
 
செவ்விதழைத்  தேடுதடி...
 
 
 
மங்கை உனைச்சேர்ந்து
 
மனம் மோகமூட்ட கூடுதடி... 
 
 
 
அவள்:
 
குளிர்ந்த அங்கம்தனை
 
குளிப்பாட்ட வருவாயோ?
 
 
 
கலைந்த கூந்தலைக்
 
களிப்பூட்ட வருவாயோ?
 
 
 
ஒளிந்த அழகினை சுடர்  
 
ஒளியாக்க வருவாயோ?
 
 
 
வடிந்த நினைவிடத்தை தீபா
 
வளியாக்க வருவாயோ? 

Thursday, March 8, 2012

சத்திரம் பேசுதடி...

ஆயிரம் சுற்றுலாவுக்கு சத்திரம் ஈடாகுமோ?

ஆயினும் சுற்றுமென் கால்களும் ஏடாகுமோ?

பூவையர் சூடுகின்ற பூக்களும் காடாகுமோ?

தேவியர் கூடுகின்ற மன்மதக் கோடாகுமோ? 



கோடு - மலை, நீர்க்கரை, வரம்பு, வளைவு, வரி சூழ்ந்தவிடம் 


பலதரப்பட்ட பாவையரும் தலையில் பூக்களின்

கலவையைச் சோலையென சூடிக் கொண்டு

உலவும் அழகிலே அவைசுமந்த பாதங்களும்

சலதரங்கம் வாசிக்கின்றதே அந்த வீதிகளில்...


சலதரங்கம் - பலவகைக் கிண்ணங்களில் பல அளவுகளில்

நீர்விட்டு சுருதி அமைத்துக் கொண்டு சிறு கழியால் தட்டி

வாசிக்கும் ஒரு வகை வாத்தியம்... 



விதியை நினைத்து புலம்புவதால் நீயும் சத்திரத்து

வீதிதனில் வலம் வந்தால் அலங்காரப் பாவையுன்

மதியை மயக்கும் எழில் கொண்டு தேவையென்று 

மீதியங்கே அழைத்திடவுன் மனதும் துடிக்குமே...



பூக்களைப் போன்ற மங்கையின் சுவடைத் தேடியே

ஈக்களென பறந்திட ஆசையும் அந்த வீதியிலே  நீர்த்

தேக்கத்தைச் சுற்றி வீசும் தென்றலுடன் மனதிலொரு

தாக்கத்தை உண்டாக்குமே தொடர்ந்து சென்றால்...



சன்னமிடும் மெல்லிய வாய்ப் புன்னகையில்

கன்னமிடும் புல்லிதழ் வாய்த் தேனெடுக்க

முன்னமிடும் உள்ளிதழ்  ஊறும் சுவையில்  

கன்னலிடும் சாறும் என்னவென்பேன்...

 
சன்னம் - சிற்றரும்பு, சிறு முத்து, மென்மை, நேர்த்தி, மறைக்கப்பட்டது ,  கன்னல் - கரும்பு

Wednesday, March 7, 2012

இரவின் வெளிச்சம்...

உதட்டின் வழி உன்னதங்கள் பல காட்டி

ஊறும் மதுவில் உள்ளத்தைக் கரைத்துப்  

பிதற்றும் விழி  முன்னழகினைக் கூட்டிப் 

பெண்மையின் பின்னழைக்கும் இரவு...





வரவைத் தேடித்தன் சிறகை விரிக்குமதன்  

வனப்பை நாடித்தான்  உறவும் சிரிக்குமதன்     

இரவைத்  தேடித்தன் நிழலைப் பிரிக்குமதன்

இன்பத்தில் சேவையதன் வெளிச்சம்...





அரவைத் தீண்டிப் பிழைத்தவர் சிலரே - பூவையின்

அழகைத் தாண்டி சளைத்தவர் இலரே - பாவையின் 

உறவைத் தீண்டி அழைத்தவர் உளரே - சேவையின்

உலகைத் தாண்டி சலித்தவர் இலரே இரவில்...





இலைமறைக் காயென ஒளித்துத் தன்

இடையசைந்தாடும் அழகும் நெளிந்து 

நிலைமறந்தாடும்  இனிமையில் கனிந்து

நினைவுகளை இழுக்கும் இரவு...





உள்ளத்தை உணர்வுக்குள் ஒளித்து அதன்வழி

உலகுக்குத் தன்னழகைக் காட்டும்  உடைவழி

கள்ளத்தைக் கூட்டும் நடனத்தில் கடைவிழிக்

கச்சேரியும் நடக்கும் இரவின் வெளிச்சத்தில்...





மதுவும் மங்கையும் பருகுவதால் கூடும்

மயக்கமும் நெஞ்சை உருக்குவதால் நாடும்

எதுவும் எங்கேயும்  பெருகித் தோற்று விடும்

இயக்கத்தை அழைக்கும்  இரவின் வெளிச்சம்...





அங்கம் தழுவிய ஆடையென அவளிடைச்

சங்கம் தழுவிடத் துடிக்கும் ஆசையும் மதுச்

சாரம் தழுவியே மலர்ந்த பெண்மையின் இதழ்

ஓரம் தழுவிடத் துடித்திடும் இரவின் வெளிச்சம்...






காணக் கிடைக்காத அழகையள்ளிச் சூடி நடைகூட்டிக்

கடைவிரித்துக் கட்டுடலில் பூந்துகிலின் எடைகுறைத்துப்   

பேணக் கிடைக்காத பேரழகும் கையேந்திப் படைதிரட்டிப் 

பேரின்ப எல்லைக்கே அழைக்கும் இரவின் வெளிச்சம்...

 



தொட்டுவிடும் தூரத்தில் அழகெழுந்து  நடனமாடித்

தூதுவிடும் நேரத்தில் பழகத் துடிக்கும் ஆசையும்

மட்டுபடாமல் மதுவோடு கலந்து உடன் புகுந்தாடி

மாதுவிடும் அழைப்புதான் இரவின் வெளிச்சம்...





சாட்டையிலா  பம்பரம் போல் சுழன்றாடும் பாவையும்

சாத்திரத்தை மூடி மறைக்கும் இரவின் வெளிச்சத்தின்

ஓட்டையிலே ஒழுகும் மதுக்கிண்ணத்  தேவையிலே

ஓரம் ஒதுங்கும் ஈரம் ததும்பும்  இதழின் ஓர் மயக்கம்...





தின்பண்டம் மட்டுமே வேறு - உற்று நோக்கினால்

ஊன்கொண்ட பிண்டம் யாவுமே ஒன்று தான் உலகிலே

வான்கொண்ட நிலவு என்றுமே நின்று தான் மனதிலே 

நான்கண்ட நினைவில் தோன்றியதும் அன்று தான்...





நாவில் மதுவின் கசப்பும்  உண்டு

நடனத்தில் நங்கையின் பசப்பும் கண்டு

பூவில் வழியும் தேனாய் உருண்டு

பூவனத்தில் தவறிய நானும் மருண்டு

தீவில் திரண்ட வெள்ளத்தின் நடுவில்

தீஞ்சுவைத் தேடும் இரவின் வெளிச்சம்...


பெண்ணழகு...

மேலழகும் கதை சொல்லும் காலழகும்

நூலவிழும் இடையழகும் முத்துநகைப்  

பல்லழகும் பருவத்தின் சொல்லளக்கும் 

நுதலழகும் மடல்விரிந்த இதழழகின்

பெட்டகத்தை மூடிநிற்கும் கட்டழகை 

வட்டமிட்டுச் சூடிநிற்கும் வடிவழகின்

வாகனமாய் ஏறிநிற்கும் மோகனத்தின்

முன்னழகும் முகிழ்ந்த பின்னழகின் 

உடையழகும் உன்னத நடையளக்கும் 

கடையழகால் காமத்தின்  விடையளக்கும்

கண்ணழகும் யாமத்தின் பெண்ணழகே...

Tuesday, March 6, 2012

ஒரு விடுகதை...

உப்பு  கரிக்கும் - அதிலே

உணர்வுகள் சிரிக்கும்...

தப்பு சரிக்கும் - அது

தவறாமல் உடன்படும்...

மூப்பு  இளமைக்கும் - அது  

முயக்கும் விதி விலக்காகும்...

ஒப்பற்ற உலகுக்கும் - அது

ஒப்புதல் அளிக்கும் இலக்காகும்...

- அது என்ன?


     
ஆம் அது கண்கள்...

மறைபொருள்...

அதனுள்ளே மறைந்த பொருளைத் தேடுவதிலும்

அதையடைய நிறைந்த அருளால் கூடுவதிலும்

இதமாகவே வாழும் தருணத்தில் ஆடுவதிலும்

இசைந்த மனது உணர்வுகளை நாடுகின்றது...



வேதங்களை விரும்பிக் கற்றவனும் தனக்கு

வேண்டியதை அடைய முற்பட்டாலும் கூட 

பாதங்களின் திருப்பமான பயணம்தனை

பார்த்து அறிந்திடும் வழியுண்டோ பூமியில்...




வெற்று விளக்கிலே விடும் எண்ணையும் நீயாக

ஏற்றி வைத்தாலொழிய எரிவதில்லை அதுபோல  

கற்று விளக்கும் பெண்ணையும் இலக்கியத்தோடு

உற்று நோக்கினாலே விளங்கும் எல்லாம்...




நெற்றி வகிடு பிரியும் அந்த நேர்கோட்டினைப்

பற்றி விட விரியும் ஆசையின் ஓர்கோட்டிலே

சுற்றித் திரியும் எண்ணங்களின் வழிபாட்டிலே

முற்றும் புரியும் மங்கையவள்  உடன்பாட்டிலே...



காட்டுக்குள் ஒளிந்த பூவைக் கண்டுத் தேனைக்

கூட்டுக்குள் ஒளித்த தேனீயாக மாறி   நீயும்

ஏட்டுக்குள் ஒளித்த அழகைக் கண்டுத் தேகக்

கட்டுக்குள்  ஒளிந்தப் பூவைக் கூட வேண்டும்...



இருபொருளாய் சங்கமமாகும் உயிர் மெய்யோடு

ஒருபொருளாய் இருந்த போதிலும் கைக்கொண்டு 

உருபொருளை   உணர்ந்து மெய்யோடு உயிராகும்

கருபொருளை உவகையின் மறைபொருள் எனலாம்...



எந்த மறை படித்தாலும் அழகை அருகில் கண்டு

இந்த முறை போதாது என்றே தான் மனம் நாடி

வந்த வழி பழகும் விருப்பம் மிகவும் கொண்டு

அந்த விழி தேடச்சொல்லும் மறைபொருளை...

தேவதாசி...

சேவைக்கென்று ஓர் மனம் - மனிதத் 

தேவைக்கென்று ஓர் தினம் - புனிதப் 

பாதை மீட்டும் ஓர் கணம் - கணிகைப் 

போதை கூட்டும் ஓர் குணம்...



மோகத்தில் அவளும் பசிக்கும்

தேகத்தின் கேள்வியைப் புரிந்திட 

இடையினத்தில் வல்லினம் புகவே

விடையினை மெல்லினமாக்குகிறாள்...



மெய் எழுத்தை ஆயுதமாகக் கொண்டு 

பொய் எழுதவே துணை எழுத்தின் வழி 

இரட்டை சுழி கடந்து தன் இடையின்

ஒற்றைச் சுழியில் உயிராக்குகிறாள்...



அரைதனிலே கால் புள்ளியிட்டு 

ஆச்சர்யக் குறி கொண்டு - தன்

வரைதனிலே முழுப் புள்ளிதொட்டு    

வரைகின்றாள் கேள்விக்குறியை...



கடைக்கண் பார்வையிட்டு

தடைஏறி வரும்  தனமிரண்டின்

உடைமீறி வரும் உணர்வாலே

குடைமீறி ஒழுகும் மழைபோல 

இடைக்குறி கொண்டு அழைப்பை

விடையாகி வர விடுத்திடுவாள்...



கள்ளத்தில் தன்னாசை நிறைவேற்ற

உள்ளத்தில் உடல்கெட்டு குழியாகிய  

பள்ளத்தில் தன் கடனைப் புதைத்து 

வெள்ளத்தில் கழுவுகின்றாள்  கற்பினை...

பெண்ணின் பருவங்கள்...

போதாகி பொழுதாகி பூவையும் மலரெனும்

போதாகி அங்கம் கிளர்ந்தெழுந்து பொங்கும்

கட்டுக்குள் அடங்காத இன்பத்தை இதழெனும்

மொட்டுக்குள் அடக்கி வளரும் உருவமெனும் 

மெட்டுக்குள் அடங்காத தேகம் இசைக்கும்

தட்டுக்குள் அடங்கும் ஏழு வகைப் பருவம்...

போது - மலரத்துடிக்கும் மொட்டு




காமத்துக்கு உருவம் எடுத்தது போலே கதவடைக்கும்

யாமத்துக்கு பருவமங்கே கடைவிரித்து இதழணைக்கும்     

போகத்துக்கு இடை வழங்கும் அட்சயப் பாத்திரமெனும்  

பாகத்துக்கும் தடை சொல்லும் சாத்திரமுண்டோ?

போகம் - இன்பம், பாகம் - பங்கு, யாமம் - நள்ளிரவு,



மெய்க்குள்ளடங்கும்  பருவங்கள் ஏழுவகையாய் உருக்கொண்டு

கைக்குள்ளடங்கா ஆசையும் ஏழுஸ்வரத்தின் பொருள்கொண்டு

பொய்க்குள்ளடங்கும்  சுவையின்பச்சுதி கூட்டிக் கருக்கொண்டு

பைக்குள்ளடங்கும் பாவையின் பண்பட்ட பெண்மையாகும்...   




ஒன்றிரண்டாய் உயிரும் உடலும் வளர்ந்து துணையாகும் 

நன்றிரண்டாய் உருவமும் பருவமும் காமக் கணையாகும்

என்றிரண்டாய் இன்பமும் இளமையும் போருக்  கிணையாகும்    

அன்றிரண்டாய் தழுவி நிற்கும் மங்கையின் அணைப்பாகும்...  




வடிக்காத செந்தேனைத் தேடிய வண்டும் வந்து

குடிக்காத பூவில் ஆடிய இளமை கண்டும் முந்திப்

படிக்காத கவியைப் போலச்சுவை உண்டுப் பந்தி

முடிக்காத பெண்மையின் பாக்கியமே பருவம்...




பேதைப் பாவம் -  ஏமம் தெரியாப் பருவம்...

பெதும்பைப் பருவம் - யாமம் புரியாப் பருவம்...

மங்கைப் பருவம் - வளமை அறியாப் பருவம்...

மடந்தை பருவம் - இளமை முறியாப் பருவம்...

அரிவைப் பருவம் -  தனிமை தழுவாப் பருவம்...

தெரிவைப் பருவம் - இனிமை நழுவாப் பருவம்...

பேரிளம்பெண் பருவம் - தலைமை வழுவாப் பருவம்...

 
ஏமம் - பாதுகாப்பு, யாமம் - நள்ளிரவு, வழுவாத - தப்பாத.

பெண்மையின் துடிப்பு...

வீடு வாசல் விட்டு  திரை கடல் ஓடி திரவியம்

தேடுவதற்காக எத்தனையோ மனிதர்கள் காய்ந்த

மரங்களைப் போலவே காலத்தை கடத்துகின்றனர்

ஈரமில்லாமல் உணர்வுகளை உலரவிட்டு கொண்டு . . .   


உலரப்போகும் ஒவ்வொரு வார்த்தைகளுக்காக 

உதடுகளை ஈரப்படுத்தும் எத்தனையோ மனிதர்கள் . . .



கணவனை நினைத்து மனைவியின் துடிப்பு :


கண்மை உலர்வதைக் கண்டு  சொல்லும் என்கணவா

பெண்மை உலர்வதை அறியலையோ ?


உண்மை உறங்குவதை நீ அறிவாய்  - ஆனால் என் 

உணர்வுகள் உறங்காததை அறிவாயோ ?


உடமைக்காகவேச் சென்று இருக்கிறாய் - நானும் அந்த

கடமைக்காகவே காத்து இருக்கிறேன் . . .   



பெண்மையின் துடிப்பு இப்படி :


நான் அணிந்து  இருப்பது  அணிகலன்களா?

இல்லை அணிகாலன்களா? 


புருவத்தின் மத்தியில் அணிகின்ற பொட்டு - நீ எந்த

துருவத்தில் இருந்தாலும் உனை  நினைப்பதற்குத் தானோ ?


தொங்கி கொண்டிருக்கும்  காதணியும் கூட தலையசைவில்

ஏங்கிக் கொண்டிருக்கும் என் காதலை ஞாபகப்படுத்துகிறதன்றோ ?


சத்தமிடும் வளையலும் கூட இரவு நேரங்களில் என்னோடு

யுத்தமிடத் தொடங்குகின்றன  நான் கொண்ட மையலோடு . . .


உன் உதடுகள்  பேசும் விவேகத்தின் முன்னால்

என் கொலுசுகளின் அசைவுகள் கூட மௌனமாகின்றன . . .


சில நேரங்களில் வீரத்தோடு பேசுகின்ற  வார்த்தைகள் கூட

விவேகத்தின் முன்னால் தோற்று விடுகின்றன . . .


கூடலின் போது அழிந்த பொட்டின் நெளிந்த அழகு

தேடலின் போது கிடைப்பதில்லையே -  நீ எந்த


விழியில் எடுத்துச் சென்றாய் என்கணவா - நான் அந்த

வழியை நினைத்துக் கொண்டு இருப்பது தான் என் கனவா ?



என் உடலின் பசலை நிறம் மாறுவதற்காகவே 

நான் தினமும் மஞ்சள் குளிக்கின்றேன் . . .



குளித்தபின் தோன்றும் வெப்பத்தின் உணர்வை நீ

உதிர்க்கும் வார்த்தையிலே உணர்ந்து கொள்ளவா என்கணவா ?

  -   இல்லை  - 

களித்தபின் தோன்றும் வெப்பத்தின் நிலையை நான்

குளிக்கும் போது நினைப்பது தான் என் கனவா ?


கண்ணாடி கூட கேலி செய்கின்றன என் உருவத்தை - உன்

முன்னாடி நான் கொண்ட  உவகை எங்கே என்று . . .

அழகி...

முன்னழகு மூச்சு வாங்க அதைப் பார்க்கும்

பின்னழகு பேச்சு வாங்க எடை போடுமெழில்

கண்ணழகின் வீச்சு வாங்கியதை மெருகேற்றப்

பெண்ணழகின் பூச்சு வாங்கிய அழகியவள்...



ஏங்கித் தவிக்கும் பெண்ணழகின் நுட்பத்தை உள்

வாங்கித் துடிக்கும் உள்ளமது புஷ்பத்தின் கள்

ஊறித் ததும்பும் எண்ணமாய் மாறியதாலே  உள்

ஏறித் துவளும் கோதையின்  வடித்த அழகு...



வெடித்த இலவம்பஞ்சின் மொத்தமும் அழகாய்ப்

பிடித்த வண்ணம்  நித்தியப் பெண்ணழகும் துலங்க  

வடித்த கலையும் நெஞ்சின் முத்தமாய் விளங்கப்

படித்த எண்ணத்தில் ஏறிய அழகியவள்...




பூக்களால் தொடுத்த பூமாலையவள் - மலர் தேடி அலைந்து

ஈக்களால் கட்டிய தேனடையவள் - பலர் கூடிப் போற்றும்

பாக்களால் தொடுக்கும் பாமாலையவள் -  நான் தேடியெடுத்த

ஆக்கத்தினால் அழிவை விரும்பாத அழகியவள்...



நடுச் சாமத்தில் எழுந்த மின்னல் கொடியவள் - தமிழின்

நடுச் சங்கத்தில் மலர்ந்த பின்னல் கொடியவள் - அமுதமாய் 

விடியும் யாமத்தை ஏங்கவிடும் மதியவள் - பழகுமெழில்  

வடியும் அங்கத்தில் தங்கிவிடும் மதியவள்...



கண்ணில் தொலையாத அழகையெல்லாம காந்தி தரும் கவியாக்க

எண்ணத் தொலையாத அழகையெல்லாம் ஏந்தி வரும் அழகியவள்...

இலக்கியத் தோழி...

பிரிவின் ஆற்றாமையால் வருந்தும் தலைவிக்கு

பேருதவியாகத் தோழியவள் மருந்தாகவும் மாறிப்

பரிதவிக்கும் உள்ளத்திற்கு விளக்கம் பலவும் கூறிப்

பண்படுத்துபவளே   தமிழ் இலக்கியத்தின் தோழி...



எண்ணெய் முடியும் போது எரிகின்ற விளக்கிற்குத் தன்

எண்ணங்களையும் தலைவனவன் பிரிந்த நோக்கத்தையும்

எண்ணெய்யாக வார்த்து  அணைகின்ற இளமைக்கு முன்

எண்ணிய விடியலை உணர்த்திடுவாள் தோழியவள்...



பெண்மைக்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளியை

கண்ணுக்கும் மை தீட்டும் கோலுக்கும்  உள்ளதுபோலே

அண்மைக்கும் நன்மைக்கும் தோழியும் விளக்குவாள்

மண்ணுக்கும் மழை கொட்டும் பருவம் வருமென்று... 



இலையுதிரும் காலம் போலே தலைவனின் பிரிவாலே தன்

நிலையுதிர்ந்த கோலம் கொண்ட தலைவியைப் பரிவோடு

அலையுரசும் கரைபோலே தன்னுடைய அனுபவத்தின்

நிலையுரசும் பேச்சாலே ஆறுதல் அளிப்பாள்  தோழியவள்...



மீட்டிய வீணையை மறுமடியும் மீட்டவே இவ்விடம் முன்பு

கூட்டிய ராகத்தின் இனிமையாலே நாளை அவ்விடம் விட்டு

ஈட்டிய பொருள் போதுமென தலைவியைத் தேடியே அன்பு

காட்டிய பாதையை வந்தடைவான் என்பாள் தோழியும்...



மஞ்சள் பூசி மேனியின் கொதிப்பைத் தலைவியவள் 

கொஞ்சம் மறைத்தாலும் எதிர்ப்பையும் மீறியங்கே 

எஞ்சி நிற்கும் உணர்வுகளின் மதிப்பை தனிமையின்

நெஞ்சில் அடைத்தாலும் அறிவாள்  இலக்கியத் தோழி...

கடை திறப்பு...

உறக்கம் மூடியக் கடை விழி திறக்கும் அவளது

கிரக்கம் மூடியத் தடை வழி திறந்து நானும்

பொறுக்க முடியா என்னாசை வழியும் திறந்து

வெறுக்க முடியா தன்னாசை தான் கடை திறப்பு... 


கிரக்கம் - மயக்கம் அல்லது களைப்பு .



ஊசல் ஆடும் என் உள்ளமது அவளைக்  காணும் 

வாசல் வந்து காத்திருக்கும் பொழுதோடு மனதும் 

பூசல் ஆடும் உணர்வோடு  புவனமே தோணும்

ஏசல் கொண்டு பூத்திருக்கும் கடை திறப்பு...

ஏசல் - ஏசுதல் அல்லது திட்டுதல், புவனம் - உலகம்.  



அணைக்கட்டில் மீதேறி வரும் வெள்ளமின்னும் 

அணைமீறத் துடிக்கும் அந்த வேகத்தோடு உன்

துணைக்கட்டில் தானேறும் வரை உள்ளமின்னும்

துணிந்திருக்கும் துஞ்சாத மோகத்தோடு...
 
துஞ்சாத  - உறங்காத. 

 

சாயும் பொழுதில் குவிந்த குமுதவாய் அவிழ்ந்து 

தோயும் போது  சுரக்கும் அமுதவாய் நிறைந்து

காயும் நிலவும் பூரணமாய் ஒளிர்ந்து மறைந்து

தேயும் வரையில் ஆடி இடையும் குறையும்...
 
 
தோய்தல் - புணர்தல் அல்லது ஒன்றிக்களித்தல் அல்லது கலத்தல், அவிழ்ந்து - மலர்ந்து.   



சிலையில் கண்ட அழகை எல்லாம் சிற்பித் தன்

தலையில் ஏற்றிச் செதுக்கிய உருவம் போலே மென்

கலையில் வளரப் பழகிய பருவம் கொண்டு பொன் 

உலையில் வார்த்தது தான் உன் தேகமோ?



இல்லையன்னாமல் இருக்குமுன் இடையில் நானும்

தொல்லை செய்தாலொழிய உறங்காத விழிகளும்

எல்லைக் காணும் வரைத் தாங்காத வழிகளும் உன்

சொல்லைக் காணாதவரைத் ஏங்கித் தவிக்குமே....
 


உடைவிலக்கி  ஊர்ந்து செல்லும் உணர்வுகளின்

தடைவிலக்கித் தேர்ந்து கண்ட கொங்கையும்தன்

நடைவிலக்கிக் கற்று கொள்ளும் பங்கயத்தாளும்   

இடைவிலக்கி ஆடும் நடனத்தால் ஏற்றமுண்டோ? 

பங்கயத்தாள் - தாமரைப் போன்ற பாதம், கொங்கை - மார்பகம். 



அல்லும் பகலும் குறையாத உன்னழகில் உறவாடக்     

கொல்லும் பொழுதும் நிறையாமல் விளையாடுவதைச்

சொல்லும் உன் தேகமும் மறையாமல் கலந்தாடினால்

செல்லும் என் சந்தேகம் மொத்தமும்...


 
அல்லும் - இரவும்.

கவலை...

கரையானைப் போல மனதிலே குடிகொண்டு 

கரையாத   ஆசையும் விடாமல் பிடிகொண்டு

நிரையாத  நினைவைத் தொடாமல் அடிகொண்டு 

வரையாத கவலைக் கோலத்தை வரைகின்றது...



கவலைக் காலைப் பிடித்து மெல்ல மெல்ல

கழுத்து வரை இழுத்து நீந்த முடியாத  நீர்த்

திவலைக்குள்  மூழ்கடிக்க முயலும் பிடியில்

திண்டாட்டம் கொடுப்பது தானதன் இயல்பு...



நோய் தீர்க்க முடியாத மருந்தாகவும் கவலை இங்கே 

ஓய்வு எடுத்தும் பிடியாத விருந்தாகவும் காலம் அங்கே

ஆய்வு எடுத்தும் விடியாத இரவாகவும் மனதும் இங்கே

உய்வு எடுத்தும் மடியாத வரவாகவும் தொடர்கின்றது...




பாகல் பழத்தைப் போல பழுத்தக் கிழவியையும் 

நாவல் பழத்தைப் போலச் செழித்தக்  குமரியையும்

நெரிஞ்சிப் பூவெனவே பாதம் பணிந்து கவலையும் 

நெரிஞ்சி முள்ளைப் போல மெல்ல அழுத்துமம்மா...


கடல் நீரில் மூழ்கி கர்மத்தைத் தொலைத்தாலும்

உடல் நீரின் தோன்றும் வியர்வையும் கவலைக்கு

உடன் ஊறிவரும் கண்ணீரையும் உலைத்தாலும்    

கடன் ஏறித் தொடரும் உப்புச் சுவையாய்...



முயலாமை பற்றிக் கொடுத்த கவலையும் ஆளாகியதன்  

இயலாமை முற்றிக் கெடுத்தக் கனவையும் நாளாகியதன்     

செயலாமை  விட்டுக் கொடுத்த நினைவும் தூளாகியதன்

புயலாமை தொட்டுக் கெடுத்த  நிலையானதம்மா...

கவித் துளிகள்...

நான் எழுதிய கவித் துளிகள்:
 
 
முத்தம்:
 
அன்பே!
 
உன் உதட்டு வரியின்
 
பிழைப் போக்க  
 
என் உதட்டு வரி கொண்டு
 
பொருத்தி
 
நான் திருத்தி எழுதும்
 
கவியே முத்தம்...
 
முத்தத்திலே சத்தமில்லாமல் 
 
இருவரின் பிழைகளும்
 
திருத்தப் படுகின்றன...
 
இறைவன் செய்த தவறை
 
இதழ் மூடியே திருத்துவோம்...
 
 
 
ஆசை:
 
அன்பே!
 
நான்
 
களத்து மேட்டிலோ  
 
இல்லையெனில்
 
உன் கழுத்து மேட்டிலோ  
 
தான் சாக வேண்டும்...
 
 
 
காதல்:
 
அன்பே!
 
என்றும் இளமையோடு
 
இருக்கும் இமைமுடிகளைப்
 
போலவே நம் காதலும்
 
உயிருள்ளவரை
 
நரையில்லாமல்
 
உணர்வுகளின்
 
கரை காண வேண்டும்...
 
 
 
உறவுகள்:
 
உலகம் எனும் புத்தகத்தின்
 
பிரிக்க முடியாத பக்கங்களில்
 
உணர்வுகளால் பிரித்து
 
எழுதப் படுகிறது உறவுகள்...
 
 
 
நட்பு:
 
காலம் கடந்து நிற்கும்
 
மாற்றத்தைப் போலவே
 
ஆலம் விழுதெனவே 
 
அருகி நிற்கும்
 
மரத்தை தாங்கியே
 
விருட்சமாய் நிழல் தந்து
 
உரத்தை உள்ளமர்த்தி 
 
அரும்பாகி கனியாவது
 
நட்பாகும்...
 
 
 
திருமணம்:
 
உருவம் இரண்டாகி
 
உள்ளம் ஒன்றாகவே  
 
பருவம் திரண்டதற்கு
 
பலர்கூடி நடத்தும்
 
ஒருவகை ஒப்பந்தமே
 
திருமணமாகும்...
 
 
 
முதல் இரவு:
 
இளமையில் பூத்த 
 
இனிமையை இருவர்கூடி
 
இரவினில் விடியும்வரை
 
தனிமையில் ஒருவர்மாறி
 
ஒருவர் தேடி பருவத்தின்
 
கேள்விக்கு விடை காண்பதே
 
முதல் இரவாகும்...
 
 
 
முதல் இரவு:
 
யாமம் தலைப் பிடிக்க நடுச்  
 
சாமம் கால் பிடித்து நடக்கும்
 
போராட்டத்திலே பரிமாறும்
 
ஓராட்டத்திலே விடியும் போது
 
நெற்றியின் விளிம்பிலே
 
வெற்றியைத் தேடுவது
 
முதல் இரவாகும்...
 
 
 
பாசம்:
 
கதவில்லா உள்ளத்தின் 
 
வாசலிலே காலம் 
 
வரைகின்ற அற்புதக் 
 
கோலமே பாசமாகும்... 
 
அவன் வரைந்தக் கோலத்தை
 
அழிக்க முடியாதெனினும்  
 
தாண்டிச் செல்லலாம்...
 
இறைவன்
 
எங்கெங்கோ புள்ளிகளை
 
வைக்கிறான்...
 
கோடுகளை உணர்வுகளைக் 
 
கொண்டே வரைகின்றான்...
 
 
 
உணர்வுகள்:
 
உள்ளம் ஒளிந்து கொண்டு  
 
உடல்கூட்டில் உலவுகின்ற
 
உருவமில்லாமல்   
 
உயிரோடு சேர்ந்து நடத்தும்
 
உன்னத நாடகமே
 
உணர்வுகளாகும்...
 
 
 
உணர்வுகள்:
 
புத்திக்கும் உள்ளத்தின் 
 
யுக்திக்கும் நடக்கும் 
 
ஒருவிதப் போராட்டமே 
 
உணர்வுகளாகும்... 
 
 
 
கனவுகள்:
 
கண்ணாடியின் பின்னால்
 
நிகழ்வதைப் போலவே
 
கண்களுக்கு பின்னால்
 
நிகழும் அற்புதமே
 
கனவுகளாகும்...
 
 
 
கனவுகள்:
 
உள்ளம் ஒளித்த ஆசைகளை
 
உணர்வுகள் உறக்கத்தின் போது
 
தேடுவதே கனவுகளாகும்...
 
 
 
நினைவுகள்:
 
உள்ளம் பழகிய
 
உணர்வுகளை ஒத்திகைப்
 
பார்க்கும் நிலையே
 
நினைவுகளாகும்...
 
 
 
நினைவுகள்:
 
உள்ளம் அசைபோடும்   
 
உன்னத உணர்வுகளின்  
 
ஈர்ப்பு விசையில் 
 
காலம் குவிக்கின்ற 
 
மாற்றமே நினைவுகளாகும்...  
 
 
 
பசி:
 
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும்
 
இடையே நடக்கின்ற உணவுப்  
 
போராட்டமே பசியாகும்...
 
 
உணவுக்கும் உதட்டுக்கும்
 
இடையே நடக்கின்ற உணர்வுப்
 
போராட்டமே பசியாகும்...
 
 
 
வலி:
 
பிறந்தது முதல் மரணம் வரை
 
உணர்வுகளின் எதிரொலியே வலியாகும்...
 
 
உயிருள்ள நிலையையும்
 
உணர்வுகளின் அலையையும் 
 
முடிச்சுப் போடுவது 
 
வலியாகும்... 
 
 
உணர்வுகளின் தடுமாற்றத்திலே
 
உடல் கொள்ளும் ஒருமாற்றமே
 
வலியாகும்...
 
 
 
கண்ணீர்:
 
கண்களின் வழியே இறங்கும்
 
காட்சியின் ஓலமே கண்ணீராகும்...
 
 
காலத்தின் அவல நிலையைக்
 
கழுவுவதற்கு இறைவன் அளித்த
 
நன்கொடையே கண்ணீராகும்...
 
 
உள்ளம் வடிக்கின்ற துன்பமும் 
 
ஊற்றடுப்பது கண்களின் கண்ணீராகும்... 
 
 
 
இன்பம்:
 
நுகர்ச்சிக்கு கிடைக்கும்
 
புகழ்ச்சியே இன்பமாகும்...
 
 
புகழ்ச்சியை அழைக்கும்
 
நுகர்ச்சியே இன்பமாகும்...
 
 
உள்ளம் உணர்வுகளை இழுத்து
 
உள்ளுக்குள்ளே விரிவது தான்
 
இன்பமாகும்...
 
 
 
பெண்மை:
 
மெய்யுண்ட உணர்வுகளிலும் - அகப்
 
பையுண்ட உதிரத்திலும்
 
பெண்மைதான் எச்சமாகும்...
 
 
பருவத்தின் மேன்மையளக்க 
 
உடல்வழியே உணர்வுகளும் 
 
உருவத்தின் துணைகொண்டு   
 
மடல்வழியே எழுதும் உதிரமே  
 
பெண்மையாகும்...
 
 
 
தாய்மை:
 
பெண்மைக்கு பெருமிதம் கொடுக்க
 
உண்மை எய்தும் ஒரு வரம் தான்
 
தாய்மையாகும்...
 
 
பெண்மையாலே எழுதப் படுகின்ற
 
உறவுகளின் இறையாண்மையே
 
தாய்மையாகும்...
 
 
பெண்மையின் உணர்வுகளுக்கு  
 
உறவு அளிக்கும் ஒரு வடிவமே  
 
தாய்மையாகும்...