Tuesday, March 6, 2012

தேவதாசி...

சேவைக்கென்று ஓர் மனம் - மனிதத் 

தேவைக்கென்று ஓர் தினம் - புனிதப் 

பாதை மீட்டும் ஓர் கணம் - கணிகைப் 

போதை கூட்டும் ஓர் குணம்...



மோகத்தில் அவளும் பசிக்கும்

தேகத்தின் கேள்வியைப் புரிந்திட 

இடையினத்தில் வல்லினம் புகவே

விடையினை மெல்லினமாக்குகிறாள்...



மெய் எழுத்தை ஆயுதமாகக் கொண்டு 

பொய் எழுதவே துணை எழுத்தின் வழி 

இரட்டை சுழி கடந்து தன் இடையின்

ஒற்றைச் சுழியில் உயிராக்குகிறாள்...



அரைதனிலே கால் புள்ளியிட்டு 

ஆச்சர்யக் குறி கொண்டு - தன்

வரைதனிலே முழுப் புள்ளிதொட்டு    

வரைகின்றாள் கேள்விக்குறியை...



கடைக்கண் பார்வையிட்டு

தடைஏறி வரும்  தனமிரண்டின்

உடைமீறி வரும் உணர்வாலே

குடைமீறி ஒழுகும் மழைபோல 

இடைக்குறி கொண்டு அழைப்பை

விடையாகி வர விடுத்திடுவாள்...



கள்ளத்தில் தன்னாசை நிறைவேற்ற

உள்ளத்தில் உடல்கெட்டு குழியாகிய  

பள்ளத்தில் தன் கடனைப் புதைத்து 

வெள்ளத்தில் கழுவுகின்றாள்  கற்பினை...

No comments:

Post a Comment