Saturday, March 10, 2012

தீபாவளியில் அவனும் அவளும்...

அவன்:
 
ஆடியும் போனதடி
 
ஆசையும் கூடுதடி...
 
  
 
ஆடிக் காற்றினிலே
 
அங்கமெல்லாம் நொந்ததடி...
 
 
 
ஐக்கியம் ஆகிவிட 
 
ஐப்பசியும் வந்ததடி... 
 
 
 
அடைமழை போல நானும்  
 
அணைத்திட வருவேனே!
 
 
 
அவள்:
 
ஆடி வந்து என்னை   
 
ஆட்டி விட்டு போனதையா...  
 
 
 
கூடிய ஆசையெல்லாம்
 
குதியாட்டம் போடுதையா?
 
 
 
ஐப்பசியில் நீயும் வந்து
 
என்பசியில் நிறைவாயோ?   
 
 
 
மோட்சமதைக் காண  
 
முத்தமழை பொழிவாயோ?
 
 
 
அவன்:
 
மழைமேகம் முன்வந்து
 
மகிழும்படி கூறுதடி...
 
 
 
பூத்த பூவிலெல்லாம் உன்  
 
புன்னகையே தோன்றுதடி... 
 
 
 
சேர்ந்த ஆசைவந்து உன் 
 
சேலைதொட நினைக்குதடி...
 
 
 
மீண்டும் வீணையை மீட்டிடவே
 
மாலைவந்து அழைக்குதடி...
 
 
 
அவள்:
 
அழையாத  மேகமாய் நீயும்
 
அங்கத்தினிலே நுழைவாயோ?
 
 
 
பாரமாகும் ஆடைமேலே
 
பாரதப்போர் புரிவாயோ?
 
 
 
தூரமாகும் உணர்வுகளை
 
தூண்டிவிட வருவாயோ?
 
 
 
மத்தளம் போல் நான் மயங்கி
 
மெலிந்துவிட வருவாயோ?
 
 
 
அவன்:
 
அங்கத்திலே ஆசைவந்து
 
அலைக்கழித்துக் கொல்லுதடி...
 
 
 
சங்கத்தமிழ் கூட பாடிச்  
 
சங்கமிக்கச் சொல்லுதடி...
 
 
 
செங்கனிச் சாறெடுக்க
 
செவ்விதழைத்  தேடுதடி...
 
 
 
மங்கை உனைச்சேர்ந்து
 
மனம் மோகமூட்ட கூடுதடி... 
 
 
 
அவள்:
 
குளிர்ந்த அங்கம்தனை
 
குளிப்பாட்ட வருவாயோ?
 
 
 
கலைந்த கூந்தலைக்
 
களிப்பூட்ட வருவாயோ?
 
 
 
ஒளிந்த அழகினை சுடர்  
 
ஒளியாக்க வருவாயோ?
 
 
 
வடிந்த நினைவிடத்தை தீபா
 
வளியாக்க வருவாயோ? 

No comments:

Post a Comment