Tuesday, March 13, 2012

காலப் பிழையில் அவள் நிலை...

ஆயிரம் துளிகளைத் தடுக்கின்றது -

அவள் ஏந்துகின்ற குடை -

ஆயினும்  ஒற்றைத் துளியாவது

அவள் மார்தொட நினைக்கின்றது -

அதனால் தான் அடைமழையோ ?



அடைமழை பெய்யும் போது

அவள் என்ன செய்வாள் ? -

குடை கூட என்ன செய்யும்

குற்றத்திற்கு உடன்படுவதைத் தவிர . . .




மார்தொட்ட ஒரு துளி கால் தொட நினைத்து

மயங்கி விழுந்து இடையில் காணாமல் போனதெங்கே ?




மார்பினில் விழுந்த நெகிழ்ச்சியில் அவள்

மானம் நனைத்து விட்டு உடையில் கைதியானதோ ?

மார் தழுவிய மகிழ்ச்சியில் இடையின் அலங்காரத்

தேர் அசையும் சிறு நடையில் காலாவதியானதோ ?



மண்ணில் விழுகின்ற மழைத்  

துளியும் எழுவது எதனாலே ?

பெண்ணைத் தழுவப் பெருமிதக்

களிப்போடு எழுவது பிழைக்காக . . . 
 

ஆம் பெண் அழகை பேரழகாய்

மிகைப்படுத்துவது  நீரென்றால் - அதனை

வகைப்படுத்துவது காற்றாகும் . . .

No comments:

Post a Comment