ஆயிரம் துளிகளைத் தடுக்கின்றது -
அவள் ஏந்துகின்ற குடை -
ஆயினும் ஒற்றைத் துளியாவது
அவள் மார்தொட நினைக்கின்றது -
அதனால் தான் அடைமழையோ ?
அடைமழை பெய்யும் போது
அவள் என்ன செய்வாள் ? -
குடை கூட என்ன செய்யும்
குற்றத்திற்கு உடன்படுவதைத் தவிர . . .
மார்தொட்ட ஒரு துளி கால் தொட நினைத்து
மயங்கி விழுந்து இடையில் காணாமல் போனதெங்கே ?
மார்பினில் விழுந்த நெகிழ்ச்சியில் அவள்
மானம் நனைத்து விட்டு உடையில் கைதியானதோ ?
மார் தழுவிய மகிழ்ச்சியில் இடையின் அலங்காரத்
தேர் அசையும் சிறு நடையில் காலாவதியானதோ ?
மண்ணில் விழுகின்ற மழைத்
துளியும் எழுவது எதனாலே ?
பெண்ணைத் தழுவப் பெருமிதக்
களிப்போடு எழுவது பிழைக்காக . . .
ஆம் பெண் அழகை பேரழகாய்
மிகைப்படுத்துவது நீரென்றால் - அதனை
வகைப்படுத்துவது காற்றாகும் . . .
அவள் ஏந்துகின்ற குடை -
ஆயினும் ஒற்றைத் துளியாவது
அவள் மார்தொட நினைக்கின்றது -
அதனால் தான் அடைமழையோ ?
அடைமழை பெய்யும் போது
அவள் என்ன செய்வாள் ? -
குடை கூட என்ன செய்யும்
குற்றத்திற்கு உடன்படுவதைத் தவிர . . .
மார்தொட்ட ஒரு துளி கால் தொட நினைத்து
மயங்கி விழுந்து இடையில் காணாமல் போனதெங்கே ?
மார்பினில் விழுந்த நெகிழ்ச்சியில் அவள்
மானம் நனைத்து விட்டு உடையில் கைதியானதோ ?
மார் தழுவிய மகிழ்ச்சியில் இடையின் அலங்காரத்
தேர் அசையும் சிறு நடையில் காலாவதியானதோ ?
மண்ணில் விழுகின்ற மழைத்
துளியும் எழுவது எதனாலே ?
பெண்ணைத் தழுவப் பெருமிதக்
களிப்போடு எழுவது பிழைக்காக . . .
ஆம் பெண் அழகை பேரழகாய்
மிகைப்படுத்துவது நீரென்றால் - அதனை
வகைப்படுத்துவது காற்றாகும் . . .
No comments:
Post a Comment