என்னவளே
உன்னிடத்தில்
எந்த இடத்தில குறை உள்ளது
என்று நான் எப்படி கூறுவேன் ?
நான் "அந்த" மடத்தை
நாடி உறங்கும் போது . . .
"ஆ" னாக்க "அந்த" மடம்
ஆகாட்டி சந்த மடம்
இன்பம் என்று வந்த மடம்!
இழந்த பின்னே எந்த மடம்?
ஈரம் காய்ந்த "அந்த" இடம்
ஈடாகுமோ என் "சொந்த" மடம் . . .
வீடாள மறந்து நானும் கன்னியின்
காடாளச் சென்றதாலே எந்தன்
பெண்டாளை விட்டு விட்டு "அந்த"
சண்டாளைச் சரண் அடைந்தேன் . . .
அடைந்தது போகமெனும் பாற்கடலிலே
கடைந்தது அமுதமென எடுத்துப் பருகியபின்
உடைந்தது கலசம் மட்டுமல்ல என்னுடைய
"மடை" திறந்த "கவனமும்" தான் . . .
நடனம் என்று நம்பி வந்து நாளும் "அந்த"
கடன்பட்டு நளினத்திலே நானும் "அங்கே"
உடன்பட்டு ஊடகத்திலே தான் மிதந்து மதி
இடமாறிய நாடகத்தை ஏன் மறந்தேனோ ?
நான் மறந்ததை கவிபெருமகனாம்,
இளங்கோ எடுத்துரைத்தான் - எல்லோருக்கும்
விளங்க தொடுத்துரைத்தான் - அது தானே
சிலப்பதிகாரம் எனும் காப்பியமாகி அதிலே
கலப்பதிகாரம் கூடாதென கண்டு சொல்ல
கண்ணகியை நாயகியாக்கி என்னுடைய
கண்ணெதிரே மாதவியைத் தூது விட்டான் . . .
மாதவியும் தூது வந்தாள்
மாதவனின் சூது கண்டாள்
மாவிலையின் தோரணத்தில்
பூவிலையின் காரணத்தால்
மேவியவள் மையல் கொண்டாள்
மேதினியைத் தான் மறந்தாள் . . .
கண்ணகியும் கண்டு கொண்டாள் - இந்தப்
பெண்ணிடத்தில் என்ன இல்லையென
தன்னிடத்தைத் துறந்து தலைவனும்
சென்றதன் காரியத்தை உணரவைத்து
கணிகைமடி சொர்க்கமென கிடந்தவனை
வணிகம் செய்ய அனுப்பி வைத்தாள் . . .
வணிகம் செய்யச் சென்றவனை
வஞ்சித்தவன் பாண்டியன் என்ற
வினயம் கண்டு விளக்கம் கூற
விதுரனிடம் சிலம்புடன் சென்று
நீதி கேட்டுப் போராடி கோபத்தணல்
நீறு பூத்த நெருப்பாக தன் இடது
நெஞ்சம்தனில் தோன்றிடவே
வஞ்சியவள் வென்று வந்தாள்
மதுரையைக் கண்ணகியாய் . . .
(பூவிலை - விலைமகள் பெறும் அற்றைப் பரிசம், வினயம் - சூழ்ச்சி, விதுரன் - கள்வன்)
உன்னிடத்தில்
எந்த இடத்தில குறை உள்ளது
என்று நான் எப்படி கூறுவேன் ?
நான் "அந்த" மடத்தை
நாடி உறங்கும் போது . . .
"ஆ" னாக்க "அந்த" மடம்
ஆகாட்டி சந்த மடம்
இன்பம் என்று வந்த மடம்!
இழந்த பின்னே எந்த மடம்?
ஈரம் காய்ந்த "அந்த" இடம்
ஈடாகுமோ என் "சொந்த" மடம் . . .
வீடாள மறந்து நானும் கன்னியின்
காடாளச் சென்றதாலே எந்தன்
பெண்டாளை விட்டு விட்டு "அந்த"
சண்டாளைச் சரண் அடைந்தேன் . . .
அடைந்தது போகமெனும் பாற்கடலிலே
கடைந்தது அமுதமென எடுத்துப் பருகியபின்
உடைந்தது கலசம் மட்டுமல்ல என்னுடைய
"மடை" திறந்த "கவனமும்" தான் . . .
நடனம் என்று நம்பி வந்து நாளும் "அந்த"
கடன்பட்டு நளினத்திலே நானும் "அங்கே"
உடன்பட்டு ஊடகத்திலே தான் மிதந்து மதி
இடமாறிய நாடகத்தை ஏன் மறந்தேனோ ?
நான் மறந்ததை கவிபெருமகனாம்,
இளங்கோ எடுத்துரைத்தான் - எல்லோருக்கும்
விளங்க தொடுத்துரைத்தான் - அது தானே
சிலப்பதிகாரம் எனும் காப்பியமாகி அதிலே
கலப்பதிகாரம் கூடாதென கண்டு சொல்ல
கண்ணகியை நாயகியாக்கி என்னுடைய
கண்ணெதிரே மாதவியைத் தூது விட்டான் . . .
மாதவியும் தூது வந்தாள்
மாதவனின் சூது கண்டாள்
மாவிலையின் தோரணத்தில்
பூவிலையின் காரணத்தால்
மேவியவள் மையல் கொண்டாள்
மேதினியைத் தான் மறந்தாள் . . .
கண்ணகியும் கண்டு கொண்டாள் - இந்தப்
பெண்ணிடத்தில் என்ன இல்லையென
தன்னிடத்தைத் துறந்து தலைவனும்
சென்றதன் காரியத்தை உணரவைத்து
கணிகைமடி சொர்க்கமென கிடந்தவனை
வணிகம் செய்ய அனுப்பி வைத்தாள் . . .
வணிகம் செய்யச் சென்றவனை
வஞ்சித்தவன் பாண்டியன் என்ற
வினயம் கண்டு விளக்கம் கூற
விதுரனிடம் சிலம்புடன் சென்று
நீதி கேட்டுப் போராடி கோபத்தணல்
நீறு பூத்த நெருப்பாக தன் இடது
நெஞ்சம்தனில் தோன்றிடவே
வஞ்சியவள் வென்று வந்தாள்
மதுரையைக் கண்ணகியாய் . . .
(பூவிலை - விலைமகள் பெறும் அற்றைப் பரிசம், வினயம் - சூழ்ச்சி, விதுரன் - கள்வன்)
No comments:
Post a Comment