1. பொழுது சாய சாய
மேல் பக்கம் சாயுமது
பொழுது விடிய விடிய
கீழ் பக்கம் தோயும்
அது எது?
2. கவிழ்ந்து பூவிருக்கும்
தோகையதை மறைத்திருக்கும்
நிமிர்ந்து காயிருக்கும்
தோளுயரம் வளர்ந்திருக்கும்
அது எது?
3. குவிந்த மொட்டு போலிருக்கும்
காம்பதைத் தூக்கி நிற்கும்
அவிழ்த்தால் அதில் பாலிருக்கும்
காம்பதைத் தேக்கி நிற்கும்
அது எது?
4. தோரணங்கள் ஏந்தி வரும்
அசையும் போது காந்தி தரும்
மேல் பக்கம் பெருத்திருந்து
கீழ் பக்கம் சிறுத்திருக்கும்
அது எது?
5. பயிர்கள் செழித்திருக்கும்
போக வழியிருக்கும் அதுவும்
மறைந்திருக்கும் - நீர் வாறி
இறைத்தால் நெகிழ்ந்து முப்
போகம் தான் கொடுக்கும்
அது எது?
6. கோடிருக்கும் இரண்டு
பக்கமும் இருக்கும்
No comments:
Post a Comment