புரியாத உள்ளம் இளகவும் அறியாமை இருள் விலகவும்
தெரியாத கேள்வி விளங்கவும் கிடைக்காத அருள் வழங்கவும்
எரியாத விளக்கு ஒளிவிடவும் விலகாத அன்பில் களித்திடவும்
சரியாத எண்ணம் பிறந்திடவும் அழியாது பண்பைக் காத்திடவும்
தீபாவளி திருநாளில் இறைவனின் ஆசி பெற்று மகிழ்ந்திடவும்
வாழ்த்துக்கள்....
ஐப்பசியின் மழையாலே முப்பசியின் விழைவாலே
எப்பசியும் கொண்டார்க்கும் அப்பசியை வென்றார்க்கும்
சொற்பசியின் கவிபோலே நெற்பசியில் புவியனைத்தும்
நற்பசியோடு சுவைத்து பொற்பசியொடு வாழ்ந்திடவும்
தீபங்களின் ஒளி வரிசையிலே அசைகின்ற உள்ளங்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
ஐக்கியமாகும் ஒளிவெள்ளம் ஐப்பசியில் இறைவனின் அருளாலே
யோக்கியமாகும் எண்ணங்களில் எல்லாம் ஈடேறிய உள்ளத்தின்
பாக்கியமாகும் களிப்புடனே தீபாவளியைக் கொண்டாடிடவே
வாக்கியமாகும் வாழ்த்துக்களை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்...
இறைவனடி சென்றார்க்குப் படையலிட்டு
இதயந்தனில் நின்றார்க்கு உடைகளிட்டு
குறைமனதை வென்றாரின் விடைபெற்று
உதயந்தனில் தீப ஒளியேற்றி வழிபட்டு
இந்த தீபாவளியை வரவேற்போம்...
மத்தாப்புப்பூ போலே எண்ணங்கள் உள் தோன்றவும் அதன்
முத்தாய்ப்பான வண்ணங்கள் புறம் தோன்றவும் இருளகல
எத்திக்கும் ஒளி கொடுக்க ஏற்றி வைத்த தீபம் போலவே
தித்திக்கும் வாழ்வமைய போற்றுவோம் தீபாவளியை...
பொருள்:
முப்பசி: உணவுப்பசி, உணர்வுப்பசி, உயிர்ப்பசி...
உயிர் பசித்திருப்பதாலே நீ இவ்வுலகிலே வசித்திருக்கிறாய்...
உடல் பசித்திருப்பதாலே நீ இப்பூவுலகை ரசித்திருக்கிறாய்...
உணர்வு தகித்திருப்பதாலே நீ இவ்வுலகிலே சுகித்திருக்கிறாய்...
No comments:
Post a Comment