Friday, March 8, 2013

முடியுமா?

ஆர்வம் தலைப்படும் போது
 
எண்ணம் கலைப்படுகிறது...
 
அது காதல் கொள்ளும் போது
 
அந்த எண்ணமே இரும்பாகும்
 
எந்த இதயமும் துரும்பாகும்...
 
 
 
உதடுகள் வாசித்து உள்ளத்தால் யோசித்து வருவதல்லக் காதல்...
 
மனுதுக்குள் யாசித்து மறையும் வரை நேசிப்பது தான் காதல்...
 
 
 
காதல் வந்த அனைவருமே தன்
 
உணர்வுகளின் ஒளியைக் கொண்டு
 
மரணம் எனும் மார்க்கம் அடையும் வரை
 
உள்ளத்தின் நிழலைத் தேடுகிறார்கள்...
 
 
 
பருவத்தின் பாதையிலே சில நேரம் காதலொரு உணவு...
 
பழகியபின் பார்த்தால் காதலொரு பகுதிநேர உணர்வு...
 
 
 
உதட்டுக்கும் உணர்வுக்கும் இடையே உலவிய காதல்
 
பகட்டுக்கும் பார்வைக்கும் விருந்தாகி கலவியில் முடியும்...
 
 
 
உள்ளத்துக்கும் உணர்வுக்கும் இடையே உலவும் காதல்
 
உலகுக்கும் வானுக்கும் இடையே நிலவாய் ஒளிரும்...
 
 
 
விலக நினைக்கும் போது
 
பழக எண்ணுவதும்
 
பழக நினைக்கும் போது
 
விலக எண்ணுவதும்
 
காதலின் தலைசிறந்த
 
ஊடலாகும்...
 
 
 
உணர்வு அதிகாரம் செலுத்தும் போது காமம் அடங்கி விடுகிறது.
 
பருவம் அதிகாரம் செலுத்தும் போது காதலும் முடங்கி விடுகிறது...
 
 
 
பிறப்புக்கும் இறப்புக்கும் தடைபோடும் துல்லியக் கோடு தான்
 
காதலுக்கும் காமத்திற்கும் இடையேயான மெல்லியக் கோடு...
 
 
 
வளரும் செடியில் பருவப் பூவாவதும் காதல்
 
தளரும் போது துருவப் பனியாவதும்  காதல்...
 
 
 
கடற்கரையில் நின்று கொண்டு
 
கடல்நீர் முழுவதும் தன்
 
இருகைகளிலே அள்ளிவிட
 
நினைப்பதும் காதல்...
 
பின்
 
அக்கரையில் வந்து 
 
கடல்நீர் குறைந்ததென  
 
இரு கைகொண்ட நீரை
 
வார்ப்பதும் காதல்...
 
இடையில் ஒழுகிய நீர்
 
எண்ணத்தால் மனதைக்
 
கழுவவதற்கோ?
 
 
 
மன்மதன் வரைந்த கோடு
 
தொடங்கிய புள்ளியே காதல்...
 
 
 
ஆசைக்கு புள்ளி வைப்பதும்  
 
அதனைக் கிள்ளி வைப்பதும் 
 
ஓசையின்றி தள்ளி வைப்பதும்
 
ஓயும்வரை அள்ளி வைப்பதும்
 
காதல்...
 
 
 
முன்னுக்கு பின்
 
முரணாக தான் கொண்ட வாழ்வும்
 
சரணாகதி ஆவது காதலில் தான்...
 
 
 
சத்தமின்றி பருவம்
 
காலத்துக்கு கொடுக்கும்
 
முத்தமே காதல்...
 
 
 
ரத்தமின்றி புருவம்
 
இதயத்துக்கு தொடுக்கும்  
 
யுத்தமே காதல்...
 
 
 
மூடியப் புத்தகத்தின் முடிவுரையாவது காதல்...
 
தேடியே நாளும் படிக்கத் தூண்டுவதே காதல்...
 
 
 
பெண்ணவளின் பருவம் வரைகின்ற
 
கண்கவரும் ஓவியமே காதல்...
 
 
 
 
 
நான் கொள்ளும் காதலை
 
மறக்க முடியுமா?
 
இல்லையென்றாலும்
 
மறுக்க முடியுமா?
 
என்ற சொல்லின்
 
இறுதியும் அவளே!
 
 
 
என்
 
உள்ளத்தின் மாணிக்கமான
 
காதலும் அவளே!
 
 
 
விளங்க முடியா மனதின்
 
விளக்காவாள் அவள்...
 
வழங்க முடியா காதலின்
 
ஒளியாவாள் அவள்...

No comments:

Post a Comment