Friday, March 8, 2013

புத்தாண்டு நல்வாழ்துக்​கள் 2013...

கடந்த ஆண்டில் எடுத்த கடமைகளைச் செய்ய

நடந்து வந்த தூரத்தை இன்னும் கடப்பதற்காகவே

தொடர்ந்து வரும் இந்த ஆண்டிலும் முயற்சியோடு

நடந்து அவரவர் இலக்கை அடைய வாழ்த்துகிறேன்...




ஈராயிரத்து பதிமூன்றாம் ஆண்டில் அடிவைத்தாலும்

ஓராயிரம் ஆசைகளின் படியில் உள்ளம் இருந்தாலும்

சீராயிரம் எண்ணங்கள் சிந்தனையின் பிடிவைத்தாலும்

ஏராயிரம் செழித்திடவே என்னுடைய வாழ்த்துக்கள்...




வீடு கடந்து மனையாள் மதி கடந்து வீதி நடந்து

நாடு கடந்து வினையால் விதி விட்ட வழி நடந்து

ஏடு கடந்து சிந்தையின் கதி நடக்க விழி நடத்தும்

பாடும் தொடரும் ஆசையும் பயன்பட வாழ்த்துக்கள்...





கேட்டதெல்லாம் கிடைக்கட்டும்

விட்டதெல்லாம் தொடரட்டும்

தொட்டதெல்லாம் துலங்கட்டும்

பட்டதெல்லாம் தளிர்க்கட்டும்...



விழி பார்த்து நடந்த வாழ்வினிலே

கை கோர்த்து கடந்த பொழுதைப்போலே

வழி பார்த்து  இனிவரும் நாளையும்

மெய் சேர்ந்து  கடந்திட வாழ்த்துகிறேன்...




அகப்பையில் புகப்பட்ட ஆசைகள் யாவும்

நகம்கையில் வளர்வதைப்  போலே வளர்ந்து

யுகம்கையில்  கிடைத்ததென  வாழ்ந்து வந்தால்

சுகம்கோடி உன்னைச் சுற்றித் தொடராதோ? 



தீர்மானங்கள் எடுக்கவும்

ஏர்மானங்கள் காக்கவும்

போற்குணங்கள் மறையவும்

நீர்நிலைகள் செழிக்கவும் 

இந்நாட்டிற்கு படிக்கட்டாக

இந்த ஆண்டு அமையட்டும்...



 


இதய கூண்டுக்குள் எழுந்த எண்ணங்கள் யாவும்

இந்த ஆண்டுக்குள் கைகூடிட வாழ்த்துகிறேன்...

No comments:

Post a Comment