Friday, March 8, 2013

ஏனென்றும் தெரிவதில்லை?

ஏன்...?

ஏனென்றும் தெரிவதில்லை

ஊனென்றும் புரிவதில்லை

வானொன்று தானதில்

வாழ்வொன்று தான்...

ஏனதில் உயிரொன்றும்

ஆனதில் உணர்வென்றும்

நீருக்குள் மீனைப் போல்

பாருக்குள் பல பேருக்குள்

ஒளிந்து நீந்திக் கரை காண

நெளிந்து செல்லும் கோலங்கள்...





பெண்...

தூக்கிக் கொடுப்பவளும்

தூக்கி விடுபவளும்

பெண் தான் - மொழியும்

நாக்கில் இருப்பவளும்

ஆக்கித் தருபவளும்

பெண் தான் - பொழுதுப்

போக்கில் வருபவளும்

ஊக்கம் தருபவளும்

பெண் தான் - சுமந்து

யாக்கைத் தருபவளும்

வாக்கைப் பெறுபவளும்

பெண் தான்...

 
பொருள்:  ஊன் - சதையுடன் கூடிய உடம்பு, பார் - உலகம், தூக்கு - ஆராய்ந்து அல்லது காலம் நீட்டித்து,

ஆக்கி - சமைத்து (உணவு மற்றும் உடல்), மொழிதல் - பேசுதல், ஊக்கம் - நம்பிக்கை, யாக்கை - உடம்பு,

No comments:

Post a Comment