Friday, March 8, 2013

மாறி வரும் உலகம்...

ஆசையின் அளவும் பெருகியதால்

ஆடையின் அளவும் குறுகியது...

உணர்வுகளின் அளவும் பெருகியதால்

உள்ளத்தின் அளவும் குறுகியது...

ஓசையின் அளவும் பெருகியதால்

உரையாடும் அளவும் குறுகியது...

பணத்தின் அளவும் பெருகியதால்

பண்பாட்டின் அளவும் குறுகியது...



மாறி வரும் உலகம் ஆசையில்

ஊறி வரும் உலகம் அறிவியலில்

தேறி வரும் உலகம் நோயில் முன்

ஏறி வரும் உலகம் நவநாகரிகமாய்...

  ...மாறி வரும் உலகம்...


தூசினில் தோன்றிய இவ்வுலகம்

மாசிலாது இருந்தது அப்பொழுது

மாசுபட மனிதனின் படைப்பும்

காசுபட கறை கொண்டது...



நதிகளும் மலைகளுடன் தோன்றிய

விதிகளுடன் இவ்வுலகம் மனிதனின்

ஆக்கிரமிப்பில் மறைந்தது கொஞ்சம்

உட்கிரகித்தால் மாறுவது கொஞ்சம்...



உழவொன்றே தொழிலாகி இருந்து

சுழன்று கொண்டிருந்து உழைப்புடன்

வளர்ந்த சமுதாயமும் இப்பொழுது

தளர்ந்தது ஏனைய தொழிலால்...



களவுகளும் பெருகியது பணத்தால்

செலவுகளும் பெருகியது நினைத்தால்

நாகரீகமாய் வளர்ந்த உணர்வும்

நான்கு கால்களில் நடந்ததால்...



ஆடையும் ஆசையும் வளர்ந்தது

ஓடையும் ஆறாய் நிறைந்தது

நிலந்தனில் ஆவலும் பிறந்தது

நிர்வாண நிலையில் மறைந்தது...

No comments:

Post a Comment