Friday, March 8, 2013

ஏக்கம்...

உருவம் வளர்ந்த பின்

உள்ளத்தில் படர்ந்தது

ஏக்கம்...


பருவம் கிளர்ந்த பின்

பக்குவமாய் தொடர்ந்ததன்

தாக்கம்...


புருவம் உயர்ந்த பின்

பூமடல் மெல்ல திறந்ததன்

நோக்கம்..


உணர்வுகள் எழுந்த பின்

உள்ளுக்குள் கடந்ததன் 

மார்க்கம்...


இரவுக்குள் ஒளிந்த பின்

இன்பத்தின் விடியல் தான்

யார்க்கும்...




     ...ஏக்கம்...

தொங்கிய முந்தானையில்

தவங்கிடந்த முள்ளிழுத்தது

அவன் தான் இழுத்தான் என

அவள் ஏன் நடித்தாள்...?


ஏங்கிய அவனுக்கு முன்

முந்தியது அந்த முள்ளா...?

இழுக்க மறந்து சிக்கிய

முந்தானையின் உள்ளா...?

No comments:

Post a Comment