Friday, March 8, 2013

கோலமயில்...

பூசல் தொடுக்கும் காலையில் போராடி எழுந்து

புனல் தனிலே பூவுடல் நடுங்க நீராடிக் குளித்து 

வாசல் தெளித்து வளமான மங்கையவள்

வனப்பான மேனியிலே ஆடைப் புனைந்து

பின்னாமல் கார் கூந்தல் விரித்ததன் மேலே

படரவிட்டு  கருஞ்சாந்துப் பொட்டிட்டு இல்லை

அன்னாமல் இருக்கும் இடையசைத்து மெல்ல

அன்னத்தின் நடையசைத்து அமர்ந்தெழுந்து

குலுங்காத தனமும் குளிரின் நெருக்கமும்

கொட்டியளக்கும்  மாக்கோலத்தின் அழகும்

அலுங்காது அடியெடுத்து முகத்தில் விழும்

அந்த முடிதிருத்தி  பூக்கோலம் வரைகின்றாள்

காலமகள் பெற்றெடுத்த கன்னி மயிலுந்தன் 

கால்கள் நடமாடி வரையும் ஓரழகும் வளர்

கோலமயில்
தோகையின் எழிலெல்லாம் 

கூடி என்னை வெல்லும் பேரழகன்றோ! 

No comments:

Post a Comment