Friday, March 8, 2013

பொங்கல் வாழ்த்து...

கார் பெருகி மழை பொழிந்து நதியெங்கும் 

நீர் பெருகி வயல் வழி ஓடி பயிர் வளர்ந்து

ஏர் பெருகி உலகெங்கும்  உழவு செழிக்க

ஊர் பெருகி உவகையுடன் கொண்டாடும்

சீர் பெருகிச் சிறந்திட வாழ்த்துகிறேன்...



கழைய வேண்டியவற்றை உள்ளதிலிருந்து கழித்து

உழைப்பினையும் உடலின் உறுதியையும் பெருக்கி


தழைக்கும் நல்வாழ்வினை  உணர்வினில் வகுத்து

அழைக்கும் அன்பும் மகிழ்ந்திட பொங்கல் வாழ்த்து...





உயிர்கள் உய்யவும்

பயிர்கள் செய்யவும்

பயன்படட்டும் இவ்வாண்டு...

பலன்பெறட்டும் நம்மக்கள்...



பொங்கலோ பொங்கல்...



உள்ளத்திலே உணர்வுகள் பொங்கட்டும்...

உலகத்திலே உழவுகள் பொங்கட்டும்...

வள்ளத்திலே உணவுகள் பொங்கட்டும்...

வழக்கத்திலே  உவகையும் பொங்கட்டும்...

வெள்ளத்திலே நதிகளும் பொங்கட்டும்...

விளக்கத்திலே மதியும் பொங்கட்டும்...

பள்ளத்திலே அருவிநீர் பொங்கட்டும்...

பழக்கத்திலே பண்பாடும் பொங்கட்டும்...


வள்ளம்  - கிண்ணம்

No comments:

Post a Comment