Friday, March 8, 2013

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

சிந்தனையில் உருவான எண்ணங்கள் திறக்கவும்

சிந்தையில் எழுந்த நினைவுகள் அருகிச் சிறக்கவும்

நந்தன வருடத்தின் நாளெல்லாம் நன்றாகிட நாமும் 

வந்தனம் செய்து வரவேற்போம் இப்புத்தாண்டை... 

 



கதிர்படும் நெல்லெல்லாம் களத்துமேட்டில்

முதிர்பெற்று இல்லத்தில் சிறப்பதைப் போலவே 

எதிர்படும் சொல்லெல்லாம் உளத்துமேட்டில்

முதிர்பெற்று செல்லுமிடத்தில் சிறக்க வேண்டும்....
 



இடை நழுவிய ஆடையை மானம் காத்திடவே

இழுத்துப் பிடிக்கின்ற கைகளைப் போல காலத்தின்

எடை நழுவிய கடந்த வருடத்தின் மானம் காக்க

எதிர்வரும் நந்தனத்தின் உடை கொடுப்போம்....

No comments:

Post a Comment