காதல் - அது
உன்னைப் பார்க்கும் கண்ணாடியாகவும்
பெண்ணைப் பார்க்கும் முன்னோடியாகவும்
திகழ்கிறது...
அதிலே
அன்பைக் காணலாம் - நல்ல
பண்பைக் காக்கலாம்...
உன்னை
ஏற்றி விடும் ஏணியாகவும்
மனத்தின்கண் கேணியாகவும்
ஆசைக் கடலின் தோனியாகவும்
அன்புத்தேடலின் அபிமானியாகவும்
விளங்குவதே காதலாகும்...
காத்திருந்தும் அலைந்தும்
தவிக்க வைத்தும்
தொல்லை தருவதே காதல்...
காலம் கடந்தும்
தழுவத் துடிக்கும்
எல்லையே காதலாகும்...
கண்கள் வரையும் ஓவியத்திற்கு
கருத்தினில் வண்ணம் கொடுப்பது
காதலாகும்...
கருத்தினில் எழும் எண்ணத்திற்கு
கழுத்தினில் சரம் தொடுப்பது
காதலாகும்...
கழுத்தினைத் தொடும் சரத்திற்கும்
களிப்பினைக் கலந்து கொடுப்பது
காதலாகும்...
களிப்புடன் தொடரும் நேரத்திற்கும்
கவர்ச்சியும் நலமும் கொடுப்பது
காதலாகும்...
காற்றுள்ளவரை காதலும் இருக்குமது
காணும் நெஞ்சில் எண்ணத்தின்
ஊற்றுள்ளவரை காதலும் சிறக்குமது
பேணும் கொஞ்சம் பேருள்ளவரை...
ஊரையும் மறந்து உறவிலே
மிதந்தது அன்றையக் காதல்...
நாரையும் மறந்த பூக்களாய்
மாறுவது இன்றையக் காதல்...
தேரையும் மறந்த தெய்வத்தைத்
தேடியது அன்றையக் காதல்...
யாரையும் மணந்து எப்படியும்
வாழ்வது இன்றையக் காதல்...
நீரைப்போல தெளிந்து ஆறாய்
ஓடியது அன்றையக் காதல்...
சேறைப்போல களிந்து மாறாய்க்
கூடுவது இன்றையக் காதல்...
வேரைப்போல் பற்றிய உள்ளத்தை
நாடியது அன்றையக் காதல்...
காரைப்போல் பருவத்தைக் கவர்ந்து
மூடுவது இன்றையக் காதல்...
கார் - கருமேகம்
ஊழ்வினையில் மீள்வினையைத் தேடியக் காதலும் காலத்தால்
மீள்வினையும் ஊழ்வினையில் முடிந்தால் திருமணம் காணும்...
வாழ்மனையில் தாழ்வினையை நாடியக் காதலும் கோலத்தால்
தாழ்வினையில் மீள்வினையின்றி மடிந்தால் பிரிவைக் காணும்...
உன்னைப் பார்க்கும் கண்ணாடியாகவும்
பெண்ணைப் பார்க்கும் முன்னோடியாகவும்
திகழ்கிறது...
அதிலே
அன்பைக் காணலாம் - நல்ல
பண்பைக் காக்கலாம்...
உன்னை
ஏற்றி விடும் ஏணியாகவும்
மனத்தின்கண் கேணியாகவும்
ஆசைக் கடலின் தோனியாகவும்
அன்புத்தேடலின் அபிமானியாகவும்
விளங்குவதே காதலாகும்...
காத்திருந்தும் அலைந்தும்
தவிக்க வைத்தும்
தொல்லை தருவதே காதல்...
காலம் கடந்தும்
தழுவத் துடிக்கும்
எல்லையே காதலாகும்...
கண்கள் வரையும் ஓவியத்திற்கு
கருத்தினில் வண்ணம் கொடுப்பது
காதலாகும்...
கருத்தினில் எழும் எண்ணத்திற்கு
கழுத்தினில் சரம் தொடுப்பது
காதலாகும்...
கழுத்தினைத் தொடும் சரத்திற்கும்
களிப்பினைக் கலந்து கொடுப்பது
காதலாகும்...
களிப்புடன் தொடரும் நேரத்திற்கும்
கவர்ச்சியும் நலமும் கொடுப்பது
காதலாகும்...
காற்றுள்ளவரை காதலும் இருக்குமது
காணும் நெஞ்சில் எண்ணத்தின்
ஊற்றுள்ளவரை காதலும் சிறக்குமது
பேணும் கொஞ்சம் பேருள்ளவரை...
ஊரையும் மறந்து உறவிலே
மிதந்தது அன்றையக் காதல்...
நாரையும் மறந்த பூக்களாய்
மாறுவது இன்றையக் காதல்...
தேரையும் மறந்த தெய்வத்தைத்
தேடியது அன்றையக் காதல்...
யாரையும் மணந்து எப்படியும்
வாழ்வது இன்றையக் காதல்...
நீரைப்போல தெளிந்து ஆறாய்
ஓடியது அன்றையக் காதல்...
சேறைப்போல களிந்து மாறாய்க்
கூடுவது இன்றையக் காதல்...
வேரைப்போல் பற்றிய உள்ளத்தை
நாடியது அன்றையக் காதல்...
காரைப்போல் பருவத்தைக் கவர்ந்து
மூடுவது இன்றையக் காதல்...
கார் - கருமேகம்
ஊழ்வினையில் மீள்வினையைத் தேடியக் காதலும் காலத்தால்
மீள்வினையும் ஊழ்வினையில் முடிந்தால் திருமணம் காணும்...
வாழ்மனையில் தாழ்வினையை நாடியக் காதலும் கோலத்தால்
தாழ்வினையில் மீள்வினையின்றி மடிந்தால் பிரிவைக் காணும்...
No comments:
Post a Comment