உணர்வுகளில் ஊடுருவும் வலியை
உருவத்தின் தனிப்பட்ட பொலிவை
உள்ளந்தனில் மறைக்கப்பட்ட நலிவே
ஒருகையோசையின் ஒலியே ஆகும்...
விரலிருந்தும் மீட்டும் வீணையில்லை - முத்துப்
பரலிருந்தும் மோகனவாயின் நகையில்லை - கத்தும்
குயிலிருந்தும் கூவும் அழைப்பில்லை - கொத்தும்
மயிலிருந்தும் தாவும் அணைப்பில்லை...
விளக்கிருந்தும் விழியருகில் ஒளியில்லை - மனதில்
விளக்கமிருந்தும் விரகத்தில் தெளிவில்லை - ஆற்றில்
கொக்கிருந்தும் கொத்திவிட மீனில்லை - எட்டுத்
திக்கிருந்தும் மதியொளி வீசிட வானில்லை...
பூவிருந்தும் அள்ளிச் சூடிடத் தலையில்லை - மடல்
பூவிரிந்தும் துள்ளி ஆடிடும் நிலையில்லை - உடலில்
நோவிருந்தும் பள்ளி சேர்ந்திடத் தடையில்லை - உள்
நோக்கிருந்தும் எள்ளி நகையாடும் இடையில்லை...
சிலையிருந்தும் செதுக்கும் உளியில்லை - கண்ணில்
சோகம் ததும்பி வடிக்கும் துளியில்லை - பெண்ணில்
கலையிருந்தும் மயங்கும் வழியில்லை - எண்ணில்
கருத்திருந்தும் இயங்கும் மொழியில்லை...
விதியிருந்தும் சேர்ந்து வாழும் திறனில்லை - மேலும்
விலகிச் சென்றால் வேறேதும் அறமில்லை - நாளும்
மதியிருந்தும் தேர்ந்து வாழும் பொறுப்பில்லை - அதை
மனதிலிருந்து சொல்வதற்கும் மறுப்பில்லை...
விடையிருந்தும் வினவுவதற்கு இடமில்லை - இனி
விடுத்துச் செல்ல வேறெங்கும் தடமில்லை - கையில்
குடையிருந்தும் நனைவதற்கு மழையில்லை - காலம்
கடந்து நினைப்பதற்கு இதுவும் பிழையில்லை...
உருவத்தின் தனிப்பட்ட பொலிவை
உள்ளந்தனில் மறைக்கப்பட்ட நலிவே
ஒருகையோசையின் ஒலியே ஆகும்...
விரலிருந்தும் மீட்டும் வீணையில்லை - முத்துப்
பரலிருந்தும் மோகனவாயின் நகையில்லை - கத்தும்
குயிலிருந்தும் கூவும் அழைப்பில்லை - கொத்தும்
மயிலிருந்தும் தாவும் அணைப்பில்லை...
விளக்கிருந்தும் விழியருகில் ஒளியில்லை - மனதில்
விளக்கமிருந்தும் விரகத்தில் தெளிவில்லை - ஆற்றில்
கொக்கிருந்தும் கொத்திவிட மீனில்லை - எட்டுத்
திக்கிருந்தும் மதியொளி வீசிட வானில்லை...
பூவிருந்தும் அள்ளிச் சூடிடத் தலையில்லை - மடல்
பூவிரிந்தும் துள்ளி ஆடிடும் நிலையில்லை - உடலில்
நோவிருந்தும் பள்ளி சேர்ந்திடத் தடையில்லை - உள்
நோக்கிருந்தும் எள்ளி நகையாடும் இடையில்லை...
சிலையிருந்தும் செதுக்கும் உளியில்லை - கண்ணில்
சோகம் ததும்பி வடிக்கும் துளியில்லை - பெண்ணில்
கலையிருந்தும் மயங்கும் வழியில்லை - எண்ணில்
கருத்திருந்தும் இயங்கும் மொழியில்லை...
விதியிருந்தும் சேர்ந்து வாழும் திறனில்லை - மேலும்
விலகிச் சென்றால் வேறேதும் அறமில்லை - நாளும்
மதியிருந்தும் தேர்ந்து வாழும் பொறுப்பில்லை - அதை
மனதிலிருந்து சொல்வதற்கும் மறுப்பில்லை...
விடையிருந்தும் வினவுவதற்கு இடமில்லை - இனி
விடுத்துச் செல்ல வேறெங்கும் தடமில்லை - கையில்
குடையிருந்தும் நனைவதற்கு மழையில்லை - காலம்
கடந்து நினைப்பதற்கு இதுவும் பிழையில்லை...
No comments:
Post a Comment