Friday, March 8, 2013

உணர்விலே தமிழ் இருக்க வேண்டும்...

உணர்விலே தமிழ் இருக்க வேண்டும்

உதட்டளவில் இருந்து என்ன பயன்?

எண்ணத்திலே தமிழ் சிறக்க வேண்டும்

எங்கும் அதன் புகழ் பறக்க வேண்டும்

உயிரிலே தமிழ் கலக்க வேண்டும்

உயர்வானதென்ற இலக்கும் வேண்டும்

நடையினில் தமிழ் மணக்க வேண்டும்

நம்மொழி என்ற இணக்கம் வேண்டும்

விடையினில் தமிழ் வெல்ல வேண்டும்

விளக்கத்தில் அதைச் சொல்ல வேண்டும்

ஒற்றுமையில் தமிழ் உலவ வேண்டும்

வேற்றுமையிலும் தரம் நிலவ வேண்டும்

தோன்றிய இனத்தைக் காத்திட வேண்டும்

தோல்வியிலும் ஒன்றிக் கூடிட வேண்டும்

வாய்மொழிகள் ஆயிரம் இருந்தும் தன்

தாய்மொழிக்கு பெருமை தேடிட வேண்டும்

உள்ளந்தனில் தமிழ் வாழ வேண்டும்

உலகந்தனில் தானாய் தமிழ் வாழும்...

No comments:

Post a Comment