ஒற்றைச் சொல்லாய் இருந்தவன் உன்னால் வாக்கியம் ஆனேன்...
நெற்றியில் பொட்டு வைத்துன் கைப்பிடித்ததென் பாக்கியம் ஆகும்...
கடல் தாண்டினால் உடன் வருவது தாகம் மட்டுமே - உன்
உடல் தீண்டுமுன் கடன் தருவாய் மோகம் மட்டுமே...
கோழியின் சூட்டில் குஞ்சுகள் மகிழ்வதை போலே - உன்
ஊழியச் சூட்டில் என் உள்ளம் மகிழ்விப்பாய் பெண்ணே...
ஆழியின் பேரலை பொங்கி நுரையாவது போலே - உன்
சுழியத்தின் ஓரலை பொங்க வைக்கிறது என்னை...
தேடிய வாழ்வினில் நாடிய பொழுதெல்லாம் நன்மையாக வேண்டும் - உன்னுடன்
கூடிய பொழுதினில் தேடிய இன்பமெல்லாம் பன்மையாக வேண்டும் - முன்பின்
ஆடிய இன்பத்தில் சூடிய உணர்வெல்லாம் பெண்மையாக வேண்டும் - பிரிவால்
வாடிய போதிலும் கூடிய நினைவெல்லாம் உண்மையாக வேண்டும்...
மழை விழுந்து மண்ணை நனைப்பதைப் போலே - உன்னால்
மனம் மகிழ்ந்து பெண்ணே உனை நினைக்க வேண்டும் நாளும்...
ஏட்டில் எழுதாத கவியே என்முன்
எழுந்து வந்தது போலே என்மனக்
காட்டில் பருகாத தேனாய் அன்புக்
காட்டிடவே வந்தவள் நீயே!
சங்கம் இல்லையென்றால் தமிழுக்கு சிறப்பில்லை - உன்
அங்கம் எனக்கென்றால் இனியொரு பிறப்பில்லை - அப்படிப்
பிறந்தாலும் உனக்கு நான் பிள்ளையாக வேண்டும் - என்மனம்
திறந்தாலும் உன்னிடமே கொள்ளைபோக வேண்டும்...
விளக்கு அசையாமல் அதன் தீபம் அசைவதைப் போலே - உன்
உள்ளம் அசையாமல் உணர்வுகள் இசைய வேண்டும் எனக்காக...
உள்ளம் காற்றை நேசிப்பதைப் போலவே நானும்
உன்னை நேசிக்கின்றேனடி முப்பொழுதும்...
வெள்ளம் ஆற்றில் ஓடுவதை போலவே நானும்
உன்னாசையில் ஆடுன்கின்றேனடி எப்பொழுதும்...
நெற்றியில் பொட்டு வைத்துன் கைப்பிடித்ததென் பாக்கியம் ஆகும்...
கடல் தாண்டினால் உடன் வருவது தாகம் மட்டுமே - உன்
உடல் தீண்டுமுன் கடன் தருவாய் மோகம் மட்டுமே...
கோழியின் சூட்டில் குஞ்சுகள் மகிழ்வதை போலே - உன்
ஊழியச் சூட்டில் என் உள்ளம் மகிழ்விப்பாய் பெண்ணே...
ஆழியின் பேரலை பொங்கி நுரையாவது போலே - உன்
சுழியத்தின் ஓரலை பொங்க வைக்கிறது என்னை...
தேடிய வாழ்வினில் நாடிய பொழுதெல்லாம் நன்மையாக வேண்டும் - உன்னுடன்
கூடிய பொழுதினில் தேடிய இன்பமெல்லாம் பன்மையாக வேண்டும் - முன்பின்
ஆடிய இன்பத்தில் சூடிய உணர்வெல்லாம் பெண்மையாக வேண்டும் - பிரிவால்
வாடிய போதிலும் கூடிய நினைவெல்லாம் உண்மையாக வேண்டும்...
மழை விழுந்து மண்ணை நனைப்பதைப் போலே - உன்னால்
மனம் மகிழ்ந்து பெண்ணே உனை நினைக்க வேண்டும் நாளும்...
ஏட்டில் எழுதாத கவியே என்முன்
எழுந்து வந்தது போலே என்மனக்
காட்டில் பருகாத தேனாய் அன்புக்
காட்டிடவே வந்தவள் நீயே!
சங்கம் இல்லையென்றால் தமிழுக்கு சிறப்பில்லை - உன்
அங்கம் எனக்கென்றால் இனியொரு பிறப்பில்லை - அப்படிப்
பிறந்தாலும் உனக்கு நான் பிள்ளையாக வேண்டும் - என்மனம்
திறந்தாலும் உன்னிடமே கொள்ளைபோக வேண்டும்...
விளக்கு அசையாமல் அதன் தீபம் அசைவதைப் போலே - உன்
உள்ளம் அசையாமல் உணர்வுகள் இசைய வேண்டும் எனக்காக...
உள்ளம் காற்றை நேசிப்பதைப் போலவே நானும்
உன்னை நேசிக்கின்றேனடி முப்பொழுதும்...
வெள்ளம் ஆற்றில் ஓடுவதை போலவே நானும்
உன்னாசையில் ஆடுன்கின்றேனடி எப்பொழுதும்...
No comments:
Post a Comment