Friday, March 8, 2013

ஏட்டில் எழுதாத கவியே!

ஒற்றைச் சொல்லாய் இருந்தவன் உன்னால் வாக்கியம் ஆனேன்...

நெற்றியில் பொட்டு வைத்துன் கைப்பிடித்ததென்   பாக்கியம் ஆகும்...



கடல் தாண்டினால் உடன் வருவது தாகம் மட்டுமே - உன்

உடல் தீண்டுமுன் கடன் தருவாய் மோகம் மட்டுமே...



கோழியின் சூட்டில் குஞ்சுகள் மகிழ்வதை போலே - உன்

ஊழியச் சூட்டில் என் உள்ளம் மகிழ்விப்பாய் பெண்ணே...

ஆழியின் பேரலை பொங்கி நுரையாவது போலே - உன்

சுழியத்தின் ஓரலை பொங்க வைக்கிறது என்னை...



தேடிய வாழ்வினில் நாடிய பொழுதெல்லாம் நன்மையாக வேண்டும் - உன்னுடன்

கூடிய பொழுதினில் தேடிய இன்பமெல்லாம் பன்மையாக வேண்டும் - முன்பின் 

ஆடிய இன்பத்தில் சூடிய உணர்வெல்லாம் பெண்மையாக வேண்டும் - பிரிவால்

வாடிய போதிலும் கூடிய நினைவெல்லாம் உண்மையாக வேண்டும்...



மழை விழுந்து மண்ணை நனைப்பதைப் போலே - உன்னால்

மனம் மகிழ்ந்து பெண்ணே உனை நினைக்க வேண்டும் நாளும்...



ஏட்டில் எழுதாத கவியே என்முன்

எழுந்து வந்தது போலே என்மனக்

காட்டில் பருகாத தேனாய் அன்புக்

காட்டிடவே வந்தவள் நீயே!



சங்கம் இல்லையென்றால் தமிழுக்கு சிறப்பில்லை - உன்

அங்கம் எனக்கென்றால் இனியொரு பிறப்பில்லை - அப்படிப்

பிறந்தாலும் உனக்கு நான் பிள்ளையாக வேண்டும் - என்மனம் 

திறந்தாலும் உன்னிடமே கொள்ளைபோக வேண்டும்...



விளக்கு அசையாமல் அதன் தீபம் அசைவதைப் போலே - உன்

உள்ளம் அசையாமல் உணர்வுகள் இசைய வேண்டும் எனக்காக...



உள்ளம் காற்றை நேசிப்பதைப் போலவே நானும்

உன்னை நேசிக்கின்றேனடி முப்பொழுதும்...

வெள்ளம் ஆற்றில் ஓடுவதை போலவே நானும்

உன்னாசையில் ஆடுன்கின்றேனடி எப்பொழுதும்...

No comments:

Post a Comment