Friday, March 8, 2013

கவித்துளிகள்...

ஓடுகின்ற ஆற்றினில் விழுந்த மழைத்துளிப் போலே நான்

தேடுகின்ற எண்ணத்தில் எழுந்த கவித்துளிகள்...


கூடுகின்ற கரையினில் எழுந்த அலைகளைப் போலே நான்

நாடுகின்ற உள்ளத்தில் விழுந்த கவித்துளிகள்...




எண்ணம் கலைப்படும் போது

எழுத்தும் தலைப்படுகிறது...


உள்ளம் நிலைப்படும் போது

உணர்வும் கலைப்படுகிறது...


உருவம் சிலைப்படும் போது 

பருவம் நிலைப்பெறுகிறது...


பெண்ணும் எதிர்ப்படும் போது

கண்ணும் புதிர்ப்படுகிறது...


கருத்தும் பலப்படும் போது

கவியும் புலப்படுகிறது...


உண்ணும் கலந்தொடும் போது 

உடலும் பலம் பெறுகிறது...


பெண்மை புலப்படும் போது 

பேரின்பம் வலம் வருகிறது...


காமம்  வலம் வரும் போது

காதல் புலம் பெயர்கிறது...


உண்மை நிலையறியும் போது 

உறவும் கலைப்படுகிறது...

No comments:

Post a Comment