Friday, March 8, 2013

சேலையைப் பற்றின்:

குதிங்காலைப் பிசக்குவதும் 

அதிகாலையில் கசங்குவதும்  

முரண்கொண்ட அழகைக்கூட  

அரண்கொள்ளப் பழகுவதற்குத்

திறங்கொண்ட மேனியிலும்

அறங்காக்கத் துணியும் சேலை...





கோபத்தை மூடிமறைக்கவும் நெஞ்சின்

தாபத்தை மூடித்திறக்கவும் எஞ்சிய

முன்னழகைப் பூட்டவும் மிஞ்சிய

பின்னழகைக் காட்டவும் கொஞ்சும்

வண்ணங்களைக் கூட்டும் வஞ்சியின்

எண்ணங்களைத் தீட்டும் சேலை...




குனிந்த அழகைப் பெண்ணோடு

தொனித்துக் கூறுவதும் - முன்

பணித்த எழிலை கண்ணோடு

துணிந்து கூறுவதும் - காலம்

கணித்த நிலையை  வனிதை

அணிந்துக் கூறுவதும் சேலை...



 முதல் இரவில் விலக்கினால் பெண்ணுக்கு இன்பம்

"முதல்" வரவின் இலக்கானால் ஆணுக்கு இன்பம்...

மறுநாள் காலையில் சேலையைத் துலக்கினால் பேரின்பம்...

மணநாள் மாலையின் அர்த்தத்தை விலக்கினால் பெருந்துன்பம்...




ஆசையை சேலையிலே விரித்திடுவாள்

அபிநயங்கள் அதன்மேல் புரிந்திடுவாள்

ஓசையின்றி வேலையைத் தெரிந்திடுவாள்

ஓயும்வரை கரையானாய் அரித்திடுவாள்  ...




பழகப் பழகப் பாலெனவே  புளித்திடுவாள்...

புளித்த கள்ளின் போதையெனக்  களித்திடுவாள்...

இளக இளக நெய்யெனவே  உருகிடுவாள்..

எதிரும் புதிருமாய் உன்னையே பருகிடுவாள்...





பெண்ணைப் பற்றி ஒரு பழமொழி உண்டு:

இதை வேறு விதமாகச் சொல்வார்கள்.

நான் சற்று நாகரிகமாக சொல்கிறேன் இப்படி:

அழுக்குத் தீரக் குளித்தவளும் இல்லை - கொண்ட

ஆசைத் தீரக் களித்தவளும் இல்லை...
           


அனுபவம் மிக்கவர்கள் இதற்கு மறுப்பு சொல்லலாமே!

No comments:

Post a Comment