நான் காதலில்
தோற்று இருந்தால்
துக்கம் தானென் கடைசிப்
பக்கமாக இருந்திருக்கும்...
காதலில்
வெற்றி கொண்டேன் - அதில்
வேள்வி கண்டேன்...
புகையும் நெருப்பும்
பகையும் விருப்பும்
அக்கம் பக்கம் இருந்தது
துக்கம் வெட்கத்தோடு
பொய்யும் புரட்டும் கலந்த
நெய்யும் வார்க்கிறது நினைவில்...
எரியட்டும் - எதிர்காலமது
தெரியட்டும் - புதிர்போடுவது
புரியட்டும் - அதிலென் வாழ்வும்
விரியட்டும்...
பாதி வரை சென்ற நதி
மீதி வரை செல்லட்டும்
கடல் காண...
ஆதி முதல் அந்தம் வரை
பாதி முதல் பந்தம் வரை
விரியும் பூவுலகின் அர்த்தம்
புரியா விதி காண...
கழுத்தில் பதியும் காதல் எழுத்தில்
கண்டதைப் பிழையென்று கொண்டதை
மதியென்றாலும் தழுவியது விதியன்றோ!?
விருப்பு மேலிட்ட
நெருப்பு அணைந்த பின்னே
வெந்த சாம்பலை அள்ளி
நொந்த மனதைத் தேற்றுவதில்
தவறில்லை என்பேன்...
No comments:
Post a Comment