Monday, February 27, 2012

ஞானப் புலம்பல்...

கேட்டுப் பெறுவது பிச்சை

கேட்காமல் கொள்வது இச்சை

தொட்டுக் கூடுவது இன்பம்

தொடாமல் சுடுவது துன்பம்

விட்டுக் கொடுப்பது நட்பு

விடாமல் தடுப்பது கற்பு

பட்டுப் போகாதது அன்பு

படாமல் படர்வது பண்பு

ஒட்டிக் கெடுப்பது பகை

ஒட்டாமல் வளர்வது மிகை

கொட்டி அழைப்பது அழகு

கொடாமல் கொடுப்பதைப் பழகு

வட்டி வளர்ப்பது வரவை

வாடாமல் அளப்பது இரவை

கட்டிப் பின்னுவது குழலை

கட்டாமல் கொஞ்சுவது மழலை

எட்டிப் பழகுவது உறவை

எட்டாமல் பறப்பது பறவை

தட்டிக் கழிப்பது வாக்கை 

தட்டாமல் பேசியதன் நாக்கை 

பெட்டிக்குள் அடக்குவது பணத்தை

பாடைக்குள் முடக்குவது பிணத்தை  

சட்டிக்குள் அடங்குவது அகப்பை

சாடாமல் சாடுவது வகுப்பை

நட்டு வளர்ப்பது மரத்தை

நடாமல் வளர்வதில்லை பரத்தை

கெட்டும் பெறுவது ஞானம்   

கேளாமல் கொடுப்பது வானம்

விட்டுப் போவது பொழுதுகள்

வீழாமல் காப்பது விழுதுகள்...


No comments:

Post a Comment