Monday, February 27, 2012

உள்ளமதில் உரையாடுகின்றாய்...

உள்ளத்தின் நிழலில் ஒளியாய் வந்தாய் 

உயிர்வாழ சுவாசத்தில் வளியாய் வந்தாய் 

உலகத்தில் உன்னதமான உறவாய் வந்தாய் 

உதிர்ந்தாலும் வளர்கின்ற இறகாய் வந்தாய்... 

 வளி - காற்று


என்ணத்தை மொழியாக்கும் கலையைத் தந்தாய்  

என்றென்றும் விழிதேடும் நிலையைத் தந்தாய்

எதிர்காலம் என்பதை நிகழ்காலமாய்த் தருகிறாய் 

எதிர்கொள்ளும் போது மகிழ்கோலமாய்த் தருகிறாய்... 



காற்றாய் நுழைந்து என்னுள் காதலாய் மலர்கின்றாய் 

காந்தம் போல் மயக்கத்தின் மோதலாய்க் கலக்கின்றாய் 

ஊற்றாய் எழுந்தோடி ஆறாய்க் கரைதேடுகின்றாய் 

உணர்வில் கலந்து உள்ளமதில் உரையாடுகின்றாய்... 

No comments:

Post a Comment