விண்ணைத் தொடாத மதியவள்...
விளக்கம் தேடாத விதியவள்...
எண்ணத் தொலையாத கலையவள்...
எனைவந்து தழுவாத நிலையவள்...
கண்ணைத் தொடரும் நிழலவள்...
கருத்தைத் தழுவும் எழிலவள்...
பெண்ணில் பேரின்பச் சிலையவள்...
பெருமைக் கடலாடும் அலையவள்...
மண்ணில் மார்கழிப் பனியவள்...
மயக்கத்தின் ஓர்வழி இனியவள்...
No comments:
Post a Comment