அவசரத்தில் புத்தி கெட்டால்
என்னுடைய பெயரும் முட்டாள் . . .
ஆத்திரத்தில் அறிவை இழந்தால்
அளக்க உதவுமா முழந்தாள் . . .
இடையினில் கண்ட விருந்தால்
இன்னல் தீருமா மருந்தால் . . .
ஈகைக்கொரு விளக்கம் விதியானால்
ஈடுசெய்ய அழைக்குமோ மதியானால் . . .
உலகைச் சொல்லி அழுவதால்
உவகை வருமா தொழுவதால் . . .
ஊருக்கு லாபம் அந்த விலையாலே
ஊர்வலத்தின் பாபம் எந்த நிலையாலே . . .
எண்ணிச் சொல்வதற்கு எதுவுமில்லை
எண்ணாமல் விடுவதற்கு பொதுவுமில்லை . . .
ஏனென்று கேட்க மண்ணில் யாருமில்லை
ஏளனத்தைப் பார்க்க கண்ணில் நீருமில்லை . . .
ஐயம் தீருவதற்கு வழியுமுண்டா
ஐயனுக்கு நான்காவது விழியுமுண்டோ . . .
ஒருத்தியின் மானம் காக்க விடியலுண்டா
ஒழுக்கம் இழந்து விட்ட மடியிலுண்டோ . . .
ஓரமாய் இருப்பவரை உலகில் மதிப்பதுண்டா
ஓடமாய் இருப்பவரை உலகம் மிதிப்பதுண்டே . . .
ஔடதம் இல்லாத நிலைமையுண்டா
ஔவையைப் போல் புலமையுண்டோ . . .
அஃ என்பதே உயிரெழுத்தின் முடிவாகும்
அஃதாவது ஆயுத எழுத்தானது வடிவாகும் . . .
என்னுடைய பெயரும் முட்டாள் . . .
ஆத்திரத்தில் அறிவை இழந்தால்
அளக்க உதவுமா முழந்தாள் . . .
இடையினில் கண்ட விருந்தால்
இன்னல் தீருமா மருந்தால் . . .
ஈகைக்கொரு விளக்கம் விதியானால்
ஈடுசெய்ய அழைக்குமோ மதியானால் . . .
உலகைச் சொல்லி அழுவதால்
உவகை வருமா தொழுவதால் . . .
ஊருக்கு லாபம் அந்த விலையாலே
ஊர்வலத்தின் பாபம் எந்த நிலையாலே . . .
எண்ணிச் சொல்வதற்கு எதுவுமில்லை
எண்ணாமல் விடுவதற்கு பொதுவுமில்லை . . .
ஏனென்று கேட்க மண்ணில் யாருமில்லை
ஏளனத்தைப் பார்க்க கண்ணில் நீருமில்லை . . .
ஐயம் தீருவதற்கு வழியுமுண்டா
ஐயனுக்கு நான்காவது விழியுமுண்டோ . . .
ஒருத்தியின் மானம் காக்க விடியலுண்டா
ஒழுக்கம் இழந்து விட்ட மடியிலுண்டோ . . .
ஓரமாய் இருப்பவரை உலகில் மதிப்பதுண்டா
ஓடமாய் இருப்பவரை உலகம் மிதிப்பதுண்டே . . .
ஔடதம் இல்லாத நிலைமையுண்டா
ஔவையைப் போல் புலமையுண்டோ . . .
அஃ என்பதே உயிரெழுத்தின் முடிவாகும்
அஃதாவது ஆயுத எழுத்தானது வடிவாகும் . . .
No comments:
Post a Comment