Monday, February 27, 2012

அ முதல் அஃ வரை...

அவசரத்தில் புத்தி கெட்டால்

என்னுடைய பெயரும் முட்டாள் . . .


ஆத்திரத்தில் அறிவை இழந்தால்

அளக்க உதவுமா முழந்தாள் . . .


இடையினில் கண்ட விருந்தால்

இன்னல் தீருமா மருந்தால் . . .


ஈகைக்கொரு விளக்கம் விதியானால்

ஈடுசெய்ய அழைக்குமோ மதியானால் . . .


உலகைச் சொல்லி அழுவதால்

உவகை வருமா தொழுவதால் . . .


ஊருக்கு லாபம் அந்த விலையாலே  

ஊர்வலத்தின் பாபம் எந்த நிலையாலே . . .


எண்ணிச் சொல்வதற்கு எதுவுமில்லை

எண்ணாமல் விடுவதற்கு பொதுவுமில்லை . . .


ஏனென்று கேட்க மண்ணில் யாருமில்லை

ஏளனத்தைப் பார்க்க கண்ணில் நீருமில்லை . . .


ஐயம் தீருவதற்கு வழியுமுண்டா

ஐயனுக்கு நான்காவது விழியுமுண்டோ . . .


ஒருத்தியின் மானம் காக்க விடியலுண்டா

ஒழுக்கம் இழந்து விட்ட மடியிலுண்டோ . . .  


ஓரமாய் இருப்பவரை உலகில் மதிப்பதுண்டா

ஓடமாய் இருப்பவரை உலகம் மிதிப்பதுண்டே . . .


ஔடதம்   இல்லாத நிலைமையுண்டா

ஔவையைப்  போல் புலமையுண்டோ . . .


அஃ என்பதே உயிரெழுத்தின் முடிவாகும் 

அஃதாவது ஆயுத எழுத்தானது வடிவாகும் . . .

No comments:

Post a Comment