Monday, February 27, 2012

அலையின் இயல்பு...

முன்பே எனக்கு தெரிந்திருந்தால் உன்

முகம் பார்த்ததோடு நிறுத்தியிருப்பேன்

அன்பே உனைப் புரிந்து கொள்ள

அகம் பார்க்க நினைத்தாலே அங்கே 

அகப்பட்டுக் கொண்டேன் நானும்

ஆழ்கடலென்று தெரியாமல் சிறைப்

புகப்பட்ட என்னை மீட்ட நீ சிந்தும்

புன்னகை அலையாலே முடியுமா?

இழுத்து விடுவது தான் அலையின் இயல்பு - என்

எழுத்து தொடர்வதும் அதன் இயல்பே...


மீட்டிய புன்னகையின் ராகத்தை

மீண்டும் மீட்டி விட எனையங்கு 

கூட்டி விடும் அந்த யோகத்தைக் 

கூடும் நாள் தான் எதுவோ?
 

No comments:

Post a Comment