பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைத்
தன் நோய்க்கு தானே மருந்து"
என்கின்ற வள்ளுவனின் குரலிலே
காதல் நோய்க்கு மருந்து என்னவென்று
அழகாக எடுத்துரைக்கிறார்...
உடல்பட்ட நோய்க்கு மருந்துண்டு பார்வைக்கு
உடன்பட்ட நோய்க்கு மருந்தவளே.
இதனைத் தழுவிய கவிதையே "நோய்க்கு மருந்தானாள்"...
அனைவரும் படித்து ரசிக்கவும்...
...நோய்க்கு மருந்தானாள்...
அவள் தந்த நோய்க்கு
அவள் தான் மருந்து -
அதையே தான் வள்ளுவனும்
அனுபவித்து முன்மொழிந்தான்...
கண் கொண்ட காதல் நோய்க்கு
பெண் கொண்டாள் மருந்து -
தன் நோய்க்கு தானே மருந்து"
என்கின்ற வள்ளுவனின் குரலிலே
காதல் நோய்க்கு மருந்து என்னவென்று
அழகாக எடுத்துரைக்கிறார்...
உடல்பட்ட நோய்க்கு மருந்துண்டு பார்வைக்கு
உடன்பட்ட நோய்க்கு மருந்தவளே.
இதனைத் தழுவிய கவிதையே "நோய்க்கு மருந்தானாள்"...
அனைவரும் படித்து ரசிக்கவும்...
...நோய்க்கு மருந்தானாள்...
அவள் தந்த நோய்க்கு
அவள் தான் மருந்து -
அதையே தான் வள்ளுவனும்
அனுபவித்து முன்மொழிந்தான்...
கண் கொண்ட காதல் நோய்க்கு
பெண் கொண்டாள் மருந்து -
விண் கொண்ட வெண்ணிலவுக்கு
விடிவெள்ளியெனவே இருந்து...
பாரா மனதையும் கண்கலந்து
சேரா நோய்க்கும் அவள் தான் மருந்து
தீராக் காதலுக்கும் அவளுடைய
பேரால் வந்தது அன்பெனும் விருந்து
இதழ்களில் ஊறித் ததும்பும் என்
இதயத்துக்கு ஏற்ற அவளே மருந்து
அதரத்தையே பருகும் முத்தமெனும்
மதுரத்தை மோகங்கொள்ள அருந்து
இறையைக் காணத் துடிக்கும் என்
நிறையை பேணும் அவள் தான் மருந்து
இரையாகும் காதல் ச(ந்த)ர்ப்பத்தினை
இடைவிடாமல் துரத்தும் நானே பருந்து
குறைவில்லா அழகைக் கொண்டே
கொடுக்கின்றாள் எனக்கும் விருந்து
மறைவில்லா மனதைத் திறந்து
மயங்கவே தருகின்றாள் மருந்து...
கரையில்லா நதியைப் போலவே
கடல்காண ஓடுகின்றாள் புரண்டு
அரைநில்லா மேகலை தான் நழுவ
ஆடல்காணத் தேடுகின்றாள் திரண்டு...
சீரசைய சிறந்து விளங்குகின்ற இடையின்
தேரசைய நடமாடினாள் தன்னை மறந்து
நேரசைய திறம்படக் குலுங்கும் அழகின்
மாரசைய படம்காட்டினாள் மெல்ல திறந்து
ஆலையில் அகப்பட்ட கரும்பைப் போல
சேலையில் புகப்பட்ட எறும்பானது அவளது
மாலையில் அடைப்பட்ட அரும்பைப் போல
காலைவரை சிறைபட்டு துரும்பானது...
பூநிறையும் காட்டிற்குள் பூத்து விரிந்த
தாமரைக் கூட்டிற்குள் காற்றுக் கூடத்
தானுழையா வண்ணம் சேர்த்தணைத்து
மானுட வாழ்வை மகத்துவம் ஆக்கினாள்...
பாலாடை போன்ற பருவத்து மேனியில்
மேலாடையென அள்ளிக் கொடுத்தாள் விருந்து
நூலாடை கூட நழுவியதை மறந்தவளும்
தேனோடையில் ஈந்தாள் தேவாமிர்த மருந்து...
உரசலில் தொடங்கிய விருந்தும் உணர்வின்
நெரிசலில் அடங்கிய பின்னர் இடைவழியின்
அரசிலைத் தடவிய மருந்தும் புணர்ந்தபின்
பரிசலும் சிக்கிய சுழி போலங்கே உழன்றது...
அருந்தாச் சங்கிலே மதுவூரிய பின்னரே அதை
மருந்தாக்கி காதல் நோய்க்குட்பட்ட மனதுக்கு
வருந்தா உணர்வையும் மெய்யதிலே கலந்தின்ப
விருந்தாக அளித்தாள் விடைபெற்றது நோயும்...
அடைகாக்கின்ற கோழியைப் போலவே "அந்த"
விடைகாக்கின்ற ஊழியத்தைக் கண்டு அவளது
இடைத்தோன்றும் ஆழியில் நானும் அலைமீறும்
தடையேறிச் செல்லுகின்ற பாய்மரப் படகாவேன்...
நோய்க் கொண்ட உடலுக்கு மருந்தானாள் - மயங்கும்
பாய்க் கொண்ட உணர்வுக்கு விருந்தானாள் - முயங்கும்
வாய்க் கொண்ட பெண்மைக்கு மருந்தானேன் -வியந்துப்
போய்க் கண்ட அண்மைக்கு விருந்தானேன்...
விடிவெள்ளியெனவே இருந்து...
பாரா மனதையும் கண்கலந்து
சேரா நோய்க்கும் அவள் தான் மருந்து
தீராக் காதலுக்கும் அவளுடைய
பேரால் வந்தது அன்பெனும் விருந்து
இதழ்களில் ஊறித் ததும்பும் என்
இதயத்துக்கு ஏற்ற அவளே மருந்து
அதரத்தையே பருகும் முத்தமெனும்
மதுரத்தை மோகங்கொள்ள அருந்து
இறையைக் காணத் துடிக்கும் என்
நிறையை பேணும் அவள் தான் மருந்து
இரையாகும் காதல் ச(ந்த)ர்ப்பத்தினை
இடைவிடாமல் துரத்தும் நானே பருந்து
குறைவில்லா அழகைக் கொண்டே
கொடுக்கின்றாள் எனக்கும் விருந்து
மறைவில்லா மனதைத் திறந்து
மயங்கவே தருகின்றாள் மருந்து...
கரையில்லா நதியைப் போலவே
கடல்காண ஓடுகின்றாள் புரண்டு
அரைநில்லா மேகலை தான் நழுவ
ஆடல்காணத் தேடுகின்றாள் திரண்டு...
சீரசைய சிறந்து விளங்குகின்ற இடையின்
தேரசைய நடமாடினாள் தன்னை மறந்து
நேரசைய திறம்படக் குலுங்கும் அழகின்
மாரசைய படம்காட்டினாள் மெல்ல திறந்து
ஆலையில் அகப்பட்ட கரும்பைப் போல
சேலையில் புகப்பட்ட எறும்பானது அவளது
மாலையில் அடைப்பட்ட அரும்பைப் போல
காலைவரை சிறைபட்டு துரும்பானது...
பூநிறையும் காட்டிற்குள் பூத்து விரிந்த
தாமரைக் கூட்டிற்குள் காற்றுக் கூடத்
தானுழையா வண்ணம் சேர்த்தணைத்து
மானுட வாழ்வை மகத்துவம் ஆக்கினாள்...
பாலாடை போன்ற பருவத்து மேனியில்
மேலாடையென அள்ளிக் கொடுத்தாள் விருந்து
நூலாடை கூட நழுவியதை மறந்தவளும்
தேனோடையில் ஈந்தாள் தேவாமிர்த மருந்து...
உரசலில் தொடங்கிய விருந்தும் உணர்வின்
நெரிசலில் அடங்கிய பின்னர் இடைவழியின்
அரசிலைத் தடவிய மருந்தும் புணர்ந்தபின்
பரிசலும் சிக்கிய சுழி போலங்கே உழன்றது...
அருந்தாச் சங்கிலே மதுவூரிய பின்னரே அதை
மருந்தாக்கி காதல் நோய்க்குட்பட்ட மனதுக்கு
வருந்தா உணர்வையும் மெய்யதிலே கலந்தின்ப
விருந்தாக அளித்தாள் விடைபெற்றது நோயும்...
அடைகாக்கின்ற கோழியைப் போலவே "அந்த"
விடைகாக்கின்ற ஊழியத்தைக் கண்டு அவளது
இடைத்தோன்றும் ஆழியில் நானும் அலைமீறும்
தடையேறிச் செல்லுகின்ற பாய்மரப் படகாவேன்...
நோய்க் கொண்ட உடலுக்கு மருந்தானாள் - மயங்கும்
பாய்க் கொண்ட உணர்வுக்கு விருந்தானாள் - முயங்கும்
வாய்க் கொண்ட பெண்மைக்கு மருந்தானேன் -வியந்துப்
போய்க் கண்ட அண்மைக்கு விருந்தானேன்...
No comments:
Post a Comment