Friday, March 8, 2013

சேலையைப் பற்றின்:

குதிங்காலைப் பிசக்குவதும் 

அதிகாலையில் கசங்குவதும்  

முரண்கொண்ட அழகைக்கூட  

அரண்கொள்ளப் பழகுவதற்குத்

திறங்கொண்ட மேனியிலும்

அறங்காக்கத் துணியும் சேலை...





கோபத்தை மூடிமறைக்கவும் நெஞ்சின்

தாபத்தை மூடித்திறக்கவும் எஞ்சிய

முன்னழகைப் பூட்டவும் மிஞ்சிய

பின்னழகைக் காட்டவும் கொஞ்சும்

வண்ணங்களைக் கூட்டும் வஞ்சியின்

எண்ணங்களைத் தீட்டும் சேலை...




குனிந்த அழகைப் பெண்ணோடு

தொனித்துக் கூறுவதும் - முன்

பணித்த எழிலை கண்ணோடு

துணிந்து கூறுவதும் - காலம்

கணித்த நிலையை  வனிதை

அணிந்துக் கூறுவதும் சேலை...



 முதல் இரவில் விலக்கினால் பெண்ணுக்கு இன்பம்

"முதல்" வரவின் இலக்கானால் ஆணுக்கு இன்பம்...

மறுநாள் காலையில் சேலையைத் துலக்கினால் பேரின்பம்...

மணநாள் மாலையின் அர்த்தத்தை விலக்கினால் பெருந்துன்பம்...




ஆசையை சேலையிலே விரித்திடுவாள்

அபிநயங்கள் அதன்மேல் புரிந்திடுவாள்

ஓசையின்றி வேலையைத் தெரிந்திடுவாள்

ஓயும்வரை கரையானாய் அரித்திடுவாள்  ...




பழகப் பழகப் பாலெனவே  புளித்திடுவாள்...

புளித்த கள்ளின் போதையெனக்  களித்திடுவாள்...

இளக இளக நெய்யெனவே  உருகிடுவாள்..

எதிரும் புதிருமாய் உன்னையே பருகிடுவாள்...





பெண்ணைப் பற்றி ஒரு பழமொழி உண்டு:

இதை வேறு விதமாகச் சொல்வார்கள்.

நான் சற்று நாகரிகமாக சொல்கிறேன் இப்படி:

அழுக்குத் தீரக் குளித்தவளும் இல்லை - கொண்ட

ஆசைத் தீரக் களித்தவளும் இல்லை...
           


அனுபவம் மிக்கவர்கள் இதற்கு மறுப்பு சொல்லலாமே!

Wednesday, March 14, 2012

நிழல் காண் மண்டிலம்...

பாவையின் கைப் பையிலும்   

தேவையானதொரு பொருளாக

சேவை செய்வதற்கும் தன்னழகு

அவை ஏறுவதற்கும்  அருளாசி 

வழங்கியது கண்ணாடி தான்.


அன்று அவள் தன்

கலைந்த முடியைத் திருத்தவும்

அலைந்த அழகை நிறுத்தவும்

கலந்த களிப்பைப் பொருத்தவும்

கனவின் நிலையை உறுத்தவும்

கண்ணாடியே பயன்பட்டது.

ஒப்பனைக்காக மட்டுமல்ல தன்

ஒத்திகைக்காகவும் சில நேரம் 

கற்பனைக்காக காட்டிக்கொள்ளும் 

காரியம் மறைக்கும் காரணமாகவும் 

கண்ணாடியே பலன்தந்தது.  

  

இன்று அதே இடத்தை

அலைபேசி பெற்றுக் கொண்டிருக்கிறது.

அலைபேசியிடத்தில் அவள் தன் 

தலைபேசும்  அழகை படம்பிடித்து

தன் நிலை திருத்தவும் சுற்றச்

சூழ்நிலை பொருத்தவும் கற்றுத்

தன் நிலை உயர்த்தவும் உற்றத்

தோழியாகி உவகை கொள்ளச் 

செய்கின்றாள்...





ஆண்டாள் தன் அழகைக்

காலக் கண்ணாடியில் பார்த்து

காலனை வெற்றி கொள்ளத் தான்

மாலவனைப் பற்றிக் கொண்டு தன்

மாயங்கள் புரிந்தாளோ? அந்தச்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் - அவன்

அடிதொட்டதாலே இடர்ப்பிடியாள்... 



ஆண்டாள் தமிழை மட்டுமா ஆண்டாள் 

அரங்கனையும் சேர்த்தல்லவா ஆண்டாள்

அவனைத்தவிர வேற்றாளை வேண்டாள்

அதீத நினைவாலே காதலும் கொண்டாள்

அரங்கத்தில் மாலைசூடக் கனவு கண்டாள்

உள்ளத்தாலே உணர்வுகளைத் தாண்டாள்

உணர்வுகளாலே பூமாலைப் பூண்டாள்

சீர்கொண்டு யாரையும் தீண்டாள்

நேர்கொண்டு  நிறைகொள்ள சீண்டாள்  

மால்கண்டு மறைகாக்க மாண்டாள்...

அருள் வேண்டி...

ஒரு புறம் பார்த்தே என்னவளுடைய
 
இரு விழிகளின் சாலையைக் கடந்ததாலே
 
மறுபக்கம் நானும் பார்க்க மறந்து போனது . . . 
 
 
 
அந்நிலவின்
 
ஒருபக்கம் ஒளி இருந்தாலும் - மறைந்து இருக்கும்
 
மறுபக்கம் இருள் தானே - அவளும் மறைத்து இருக்கும்
 
மறுபக்கம் அருள்வாளா ? 
 
 
 
இல்லையென்றால்
 
திரண்டு இருக்கும் என்னுடைய ஒருபக்க எண்ணங்களில்
 
புரண்டு இருக்கும் அவளின் மறுபக்க நினைவுகளைக் 
 
கண்டு மிரள்வேனோ ?
 
 
 
தொல்லையென்றால்  
 
விரிந்து இருக்கும் அவளது அழகின் எல்லையில் சுடர்விடத்
 
திரிந்து இருக்கும் இடைவெளியில் நெய்விட்டு நெடுநேரம்
 
எரிந்து சுருள்வேனா ?
 
 
 
பிடியில்லா வானத்தைப் போல நானும் தேடித்
 
பிடிக்கின்ற நிலவாக வருவாளோ ?
 
 
 
கொடியில்லா மலரைப் போல அவளும் படரத்  
 
துடிக்கின்ற  மடிமேலே வருவாளோ ?
 
 
 
உரையில்லா என் உள்ளக் குறிப்பிற்கு முன்
 
உரையாகும் உணர்வுகளாக வருவாளோ ?
 
 
 
கரையில்லா இன்பக்கடல் நீந்த என் இளமைக்
 
கரையேறும் தோணியாக வருவாளோ ?

உள்ளவரை தான்...

என்னவளே!
 
உன்னில் மட்டுமல்ல
 
மலருக்கும் கூட
 
ஈரம் உள்ளவரை தான் நாற்றம் இருக்கும் . . .
 
 
 
உன் இளமைக்கும் மட்டுமல்ல
 
பாதைக்கும் கூட
 
தூரம் உள்ளவரை தான் ஏற்றம் இருக்கும் . . .
 
 
 
உன் எழிலுக்கும் மட்டுமல்ல
 
பூமிக்கும் கூட
 
பாரம் உள்ளவரை தான் போற்றுதல் இருக்கும் . . .
 
 
 
உன் உணர்வுக்கு மட்டுமல்ல
 
உணவுக்கும் கூட
 
காரம் உள்ளவரை தான் பற்றுதல் இருக்கும் . . .
 
 
 
உன் விளையாடலுக்கு மட்டுமல்ல
 
இமைத் தேடலுக்கும் கூட
 
நேரம் உள்ளவரை தான் நாட்டம் இருக்கும் . . .
 
 
 
ஆனால்
 
இவையாவும் இழந்தபின்னே
 
 
 
என் விதியாடலுக்கு மட்டுமல்ல
 
 
மனமாடலுக்கும்  கூட
 
தாரம் உள்ளவரை தான் ஆட்டம் இருக்கும் . . .

ஏதோ சிந்தனை...

கண்ணாடி தனது பிம்பத்தை தவிர
 
மற்ற பிம்பங்களையே  காட்டும் . . .
 
அது தனது பிம்பத்தைக் காட்டுவதற்கு
 
இன்னொரு கண்ணாடி தேவைப்படுகிறது . . .
 
 
ஆனால் பெண் எப்போதும் தன்னை
 
காட்டுவதிலேயே அதிகம் கவனம்
 
எடுத்துக் கொள்கிறார்கள் . . .
 
 
பெண்
 
கண்ணாடியின் எதிர் வினையோ ?
 
கவனமாக கையாள வேண்டியது
 
கண்ணாடி மட்டுமல்ல
 
பெண்ணும் தான் . . .
 
கல்லைக் கூட மெதுவாக வைக்கலாம்
 
கண்ணாடியின் மீது - ஆனால்
 
வேகம் விவேகத்திற்கு அழகல்ல,
 
விளக்கம் விபரீதத்திற்கு அழகல்ல . . .
 
 
 
இரு புறமும் தெரிகின்ற
 
கண்ணாடியை இருந்த நான்
 
காதலெனும் ரசம் பூசிக் கொண்டதால்
 
என்னை நானே பார்த்து கொள்கிறேன் . . .
 
அதில் இத்தனை நாளில் இல்லாததொரு
 
இனிமையைக் காண்கிறேன் . . .
 
 
இளமைத் தடம் மாறுவதும்
 
இனிமை தடுமாறுவதும்
 
இங்கு தானோ ?
 
 
நடந்து வந்த பாதச் சுவடுகளை
 
நான் இரவிலே தேடிக் கொண்டிருக்கிறேன் 
 
தொலைத்த சோம்பலைச்
 
சுறுசுறுப்புடன் தேடும் எறும்புகளை போல. . .

நான் எழுதிய வர்ணனைகள்...

 வளர வளர கண்டு களிப்பதற்கும்
 
 போற்றுவதற்கும் அழகாய் இருப்பது
 
 தனங்கள் மட்டுமே - அவைத்  
 
 தளர தளர முற்றியதையும்
 
 வற்றியதையும் பார்த்து வருந்துவது
 
 மனங்கள் மட்டுமே!
 
  (தனங்கள் - செல்வங்கள் மற்றும் பெண்ணின் மார்பகங்களைக் குறிக்கும்)
 
 
 
 விழாச் சுமைதனை
 
விருப்பம்கொள்ள சுமக்கும்
 
 பருவப் பூவின்  
 
 மூடா மடலை
 
 மூடுவது யாரடியோ?
 
(பூ என்பது உலகம் மற்றும் பூவையும் குறிக்கும்)
 
 
 
 பூப்பெய்திய விரிசலும்
 
மூப்பெய்தினாலும் நெருங்குமோ?

 
 
 நாலு கால் பந்தலிட்டு
 
 நடுவிலே யாகக் குண்டமிட்டு
 
 நூலிடைப் போகத் தாளமிட்டு
 
 நோக்கத்தோடு கட்டுகின்றான்...
 
(திருமணம் மற்றும் அதன் பின்னர் நிகழும் உறவையும் குறிக்கும்)
 
 
 
 
 வெடிக்காத பருத்தியிலே
 
 ஆடை நெய்ய முடியுமா?
 
 
 
 பக்குவமாய் வளர்ந்த தேனடையும்
 
 பயனடைய ஓர்நாள் தானுடையும்...
 
 
 
 போகக் குடை இருந்தும் மேகம்
 
 பொங்கியெழுந்து தூவியது மழை...
 
 ஆகத் தடை இருந்தும் தேகம்
 
 ஏறி விழுந்து மேவியதன் பிழை...
 
 
 
 ருதுவான பூமியின் தலைமேலே அதி
 
 ரூபங்கள் நனைந்திட குடங்குடமாய்
 
 பொதுவாகச் சல்லடம் மேல் கொட்டுவதைப்
 
 போல் கொட்டுகின்றது மழை...
 
 அந்தரங்கள் வரை நீரானது மாய
 
 சுந்தரங்கள் காட்டியதோடு பூமியுடன் 
 
 போராடியே பூசிய வண்ணங்கள் கரைந்திட 
 
 காரோடிய பருவத்தின் மழை...  
 
(மழைப் பருவத்தையும் மங்கை திரண்ட நாளின் பருவத்தையும் குறிக்கும்)
 
 
 
 மண்ணிலே துளி விழுந்தால்
 
மறுபடியும் மழைமேகம் ஏற்குமோ?
 
 
 
 நீந்தத் தெரியாதவர்கள்
 
 குடம் பற்றி நீந்தியே
 
 சுழிதனில் சிக்காமல்
 
 கொள்ளிடக் கரை காண்பாரா?
 
 
 
 கொண்டை முடியத் தெரியாதவள்  
 
 குதித்து ஆடியத் தாண்டவத்தில்
 
 தண்டை ஓடியத்  தன் கால்கள்
 
 தவறி விடியுமுன் விழுந்தாளாம்...
 
 
 
 உடை வாழும் உணர்வுகளின்
 
 இடை வாழும் கலையுமதன்
 
 நடை வாழும் நாட்டியத்தின்
 
 விடை வாழும் நடுச்சங்கமோ?
 
 
 
 வியர்வைக்கு முன்னால் சிறு விளக்கு தேவையா?
 
 வியர்வைக்கு பின்னால் அதன் விளக்கம் தேவையா?
 
 
 
 பெர்முடா முக்கோணத்தில்  விழுந்தவர் யாரேனும்  
 
 பெருமை கொள்ள பிழைத்தது உண்டா?
 
 
 
 மர்ம தேசத்தில் கடன் கழித்தாலும் தன் பிறவிக்
 
 கர்மம் தொலைத்திட வழியுமுண்டோ?
 
 
 
 மத்தெடுத்து கடைந்தால்
 
 மசியாதக் கீரையுமுண்டோ?
 
 
 
 உடைந்த மதுக்குடத்திலே   
 
 ஒழுகாத மதுவுண்டோ?   
 
 
 ஆறாப் புண்ணை
 
 ஆற்றிவிடும் களிம்புண்டோ? 
 
 
 
 உடன்பட்ட விருந்துக்கு
 
கடன்படவும் மருந்துண்டோ?
 
 
 
 அழையாத நிகழ்வுக்குப்
 
 பிழையானால் பொறுப்பாகுமோ?
 
 
 
 நனையாத மீனுக்கு
 
 நடுக்கம் உண்டோ?
 
 
 
 மெய் எழுதிய உருவம்
 
 மை எழுதிய புருவம்
 
 பொய் எழுதிய தர்மமென
 
 போனதொரு கர்மம்...

Tuesday, March 13, 2012

விலை நிலங்கள்..​.

வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி வீடுகட்டியும்

கயிற்றின் மேலே நடப்பதைப் போலே மக்கள்

சோற்றுக்குப் பஞ்சமும் கையேந்தும் நிலையும் 

நேற்றுக்கும் இன்று விலைவாசிக்கும் பசிக்குப்

படியளக்க ஒருநாளில் கதியிழந்த மாக்களாய்

குடியிழக்க விதியளக்கும் எதிர்காலம் வரலாம்...




தனவான்கள் கூட ஒரு நாளில் சோறுகண்ட

கனவான்களாய் மாறும் நிலையும் சேறுகண்ட

உழவர்கள் மட்டுமே பின்னாளில்  வீறுகொண்ட

உழவும் கிட்டும் தனவானாகும் நிலையும் வரும்...




தாயாகிய தங்களது நிலந்தனை நிந்தனைக்குடன்பட்டு    

சேயாகிய மகள் புகுந்தவீடு செல்லும் நினைவினிலும்  

அள்ளி வழங்கிய பாசத்திற்கு விலையாக கண்ணீரைத்

தள்ளியும் தன் கடனைக் கழிக்கின்றனர் விவசாயிகள்...




எழுதும் கோல் உள்ளவன்  கூட எதிர்காலத்தில்

உழுதுண்டு பின் செல்ல நேரிடும் உணவுண்டு

பழுதின்றி வாழ வழியொன்று தானென்று

தொழுதுண்டு உழவை அவனும் மதித்திடுவான்...



களவுக்கும் வழியுண்டு பிற்கால நிலையில்

நிலவுக்கும் வழிகண்டு தற்கால நிலையை

விழலுக்கு இறைத்த நீராய் எதிர்காலமும்

உழவுக்குப் பின்வந்து நிற்குமன்றோ?



விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி இந்நாளில்

அவசியமான உழவுத் தொழிலின் நலம்கெடவே

அனைவருக்கும் பசிதீர்க்கும் அட்சயப் பாத்திரமும்

அனைவரும் யாசிக்கும் பிச்சைப் பாத்திரமாகுமோ?